Wednesday, May 4, 2011

                                              அஞ்சலக மூடல் -  வேலூர்  கோட்ட அதிகாரியின் மக்கள் விரோத நடவடிக்கை  

பொது மக்கள் சேவை என்று கூறிக்கொண்டு சினிமா நடிகை பிறந்த
நாளுக்கு E-POST  அனுப்பச் சொல்லும் கேவலத்தை அரங்கேற்றும்
கோட்ட அதிகாரி ,   பொய்யான RPLI பாலிசி களை போடச் சொல்லி  
அப்பாவி GDS  ஊழியர்களை  சுரண்டி , பொதுமக்கள் பணத்தையும் 
விரயமாக்கும் வேலூர்  கோட்ட அதிகாரி , பள்ளிப் பிள்ளைகள்
ஆசிரியரின் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லி நல்ல பெயர்
வாங்க விரும்புவது போல் ,  உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர்
வாங்க  அஞ்சலக மூடல்  திருவிழாக் களை அரங்கேற்றி வருகிறார். 

MC  KENCY  திட்டங்களை எதிர்த்து  JCA  சார்பில் நாடு தழுவிய 
காலவரையற்ற வேலை நிறுத்தத்தினை அறிவித்துள்ள சூழ்நிலையில், 
இலாக்கா தலைமையே  பேச்சுவார்த்தை நடத்திட அழைத்துள்ள 
நிலையில் ,  எங்குமே  இல்லாமல் வேலூரில் மட்டும்  நான்கு அஞ்சலகங்கள்
மூடப்பட்டுள்ளது ,  அவர்  யார்  என்பதை பொதுமக்களுக்கு வெளிச்சமிட்டு 
காட்டுகிறது.  

இந்த தேச விரோத , மக்கள் விரோத  அஞ்சலக மூடலை எதிர்த்து
வேலூர்   கோட்ட  JCA  சார்பில் பொதுமக்கள் அமைப்புகளுடன் சேர்ந்து 
இன்று (04.05.2011) மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்  நடைபெறுகிறது. 
இது மாபெரும் மக்கள் இயக்கமாக நாளைமுதல் மாறவிருப்பதாக
பொதுமக்கள் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். 

மூடப்பட்ட அஞ்சலகங்கள் உடனடியாகத் திறக்கப்படாவிட்டால் ,
 எதிர் வரும் 09.05.2011  முதல்  JCA  சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம்
நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

போராடும் தோழர்களை  நாம்  வாழ்த்துவோம் !  தேசம் காப்போம் !
மக்கள்  சேவை  காப்போம் !

அந்நிய நாட்டு கம்பெனிகளின்   ஆளுகையின் கீழ் செயல்படும்
மக்கள் விரோத  சக்திகளுக்கு எதிராக  வெகு ஜன இயக்கத்தை 
கிளர்ந்தெழச் செய்வோம் !  மக்கள் சேவையை மீட்டெடுப்போம்!

உறுதி கொள்வோம் தோழர்களே !  வெற்றி மக்கள் சக்திக்கே !

தலைமை தாங்கிப் போராடும் JCA  தலைவர்களுக்கும் NFPE 
இயக்கத்தின் மாவீரர்கள்   தோழர்  அம்ருத கணேசன் ,  தோழர் வீரன் 
ஆகியோருக்கும்  நம்  வீர வாழ்த்துக்கள்.