Friday, November 11, 2016

SIRKALI BRANCH CONFERENCE HELD AT SIRKALI HPO ON 06.11.2016 A GRAND SUCESS !

கடந்த 06.11.2016 அன்று சீர்காழி அஞ்சல் மூன்று கிளையின் மாநாடு சீர்காழி தலைமை அஞ்சலகத்தில் கிளையின் தலைவர் தோழர். R .ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டு ஏற்பாடுகளை கிளையின் செயலர் தோழர். N . நடராஜன் அவர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தார். 

மாநாட்டில் அஞ்சல் மூன்றின் அகில இந்தியத் தலைவரும், மாநிலச் செயலருமான தோழர். J. ராமமூர்த்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது அரங்கு நிகழ்வில் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் மயிலாடுதுறை அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர். P . இரவிச்சந்திரன், செயலர் தோழர். கே. துரை, பொருளர் தோழர். வெங்கடேஷ், முன்னாள் கோட்டச் செயலர். தோழர். ஊமதுரை, அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர். அமிர்தலிங்கம், பொருளர். தோழர். வேல்முருகன், சீர்காழி அஞ்சல் மூன்றின் செயலர் தோழர். N . நடராசன், முன்னாள் செயலர் தோழர். T.செல்லத்துரை அஞ்சல் நான்கின் செயலர் தோழர். ராஜேந்திரன், முன்னாள் செயலர் தோழர்.மணி  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினார். 

மாநாட்டில் நடப்பு ஈராண்டு காலத்திற்கான கீழ்க்கண்ட  நிர்வாகிகள் ஏகமானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் :    தோழர்.  R . ராமமூர்த்தி,  P.A.,  சீர்காழி HPO 
செயலர்    :    தோழர்.  T . கோவிந்தராஜன் @ ராஜா , DSM , சீர்காழி HPO 
பொருளர் :   தோழர்.   S. ராஜசேகர், SPM,  திருவாளப்புத்தூர் SO 

மாநாட்டு இறுதியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலர் தோழர். ராஜா நன்றியுரையாற்றினார். மாநாடு இனிதே முடிவுற்றது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். மாநாட்டு நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில கீழே  உங்களின் பார்வைக்கு.