Monday, February 21, 2011

PUDUKKOTTAI AND TIRUPUR DIVISIONAL CONFERENCES- A SUCCESS

புதுக்கோட்டை மற்றும் திருப்பூர்  கோட்ட ஈராண்டு மாநாடுகள்

புதுக்கோட்டை கோட்ட ஈராண்டு மாநாடும் திருப்பூர் கோட்ட ஈராண்டு
மாநாடும் கடந்த 20 .02 .2011 அன்று முறையே  புதுக்கோட்டை மற்றும் 
திருப்பூர் தலைமை அஞ்சலகங்களில் மிக சிறப்பாக நடைபெற்றன .

திருப்பூர் கோட்ட மாநாட்டில் நமது பொதுச் செயலர் KVS  அவர்களும் ,
அகில இந்திய செயல் தலைவர் தோழர்  N .G . அவர்களும்  சம்மேளன 
செயல் தலைவர் தோழர் சந்திரசேகர் அவர்களும்  கலந்து கொண்டு 
சிறப்பித்தார்கள். 

தவிர இதர கோட்டக்கிளை  நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். 
சிறப்பான மாநாட்டில்  போட்டி இன்றி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது  மேலும் சிறப்பு சேர்த்தது .

கோட்டத் தலைவராக தோழர் . ரவீந்திரன் அவர்களும்
கோட்டச் செயலராக தோழர் . N . சுப்ரமணியன்  அவர்களும்

ஏகமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். அவர்கள் பணி சிறக்க
மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

இது போலவே புதுக்கோட்டையிலும்  போட்டியின்றி  ஏக
மனதாக நிர்வாகிகள்  தேர்ந்தெடுக்கப்பட்டது  ஊழியர் ஒற்றுமையை
பிளவு வாதிகளுக்கு வெளிச்சம்  போட்டுக் காட்டியது .

கோட்டத் தலைவராக  தோழர் சங்கரன் அவர்களும்
கோட்டச் செயலராக தோழர் R . குமார் அவர்களும்

மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் . அவர்களை நாம்
வாழ்த்துவோம்.

வலுவான மாநிலச் சங்கம் அமைக்கும் பாதையில்
நாம் பயணிக்கிறோம். ஒவ்வொரு மாநாடும் நாம்
கடக்கும் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்லே.

...... தோழமை வாழ்த்துக்களுடன்   J .R . , மாநிலச் செயலர்.