Thursday, December 22, 2011

HUNGER FAST BY ALL CIRCLE SECRETARIES OF NFPE TN ON 26.12.2011

                        NFPE மாநில ஒருங்கிணைப்புக் குழு சார்பாக
                           மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

அன்பு கோட்ட/கிளைச் செயலர்களே! மாநிலச் சங்க நிர்வாகிகளே !
முன்னணித் தோழர்களே !  அன்பான வணக்கங்கள் !

நம்முடைய JCA தலைவர்கள் எதிர்வரும் 26.12.2011 அன்று டாக் பவன் முன்பாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஒட்டி கோரிக்கைகளை
வலியுறுத்தி உண்ணாவிரதம் அறிவித்துள்ளது உங்களுக்கு தெரியும்.

எனவே இதனை ஒட்டி  தமிழ் மாநில NFPE  ஒருங்கிணைப்புக் குழு சார்பாக
அனைத்து மாநிலச் செயலர்களும்   26.12.2011  அன்று காலை  09.00 மணி  முதல் மாலை 05.௦௦ மணி வரை சென்னை அண்ணா சாலை அஞ்சலகம் முன்பாக ஒரு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திட
முடிவெடுத்து அறிவித்துள்ளோம் . அதற்கான போஸ்டர் அனைத்து கோட்ட/கிளைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களும் பெரும்பான்மையான
முன்னணித் தோழர்களுடன் (P3, P4, GDS உள்ளிட்ட)  தங்களது கோட்ட/கிளைச்சங்கங்களின் பேனர்களுடன் உண்ணாவிரத்தில்
பெருந்திரளாக கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம் . சென்னை
பெருநகர மண்டலத்தில் உள்ள தோழர்கள் கண்டிப்பாக பெருவாரியாக
கலந்து கொள்ளவேண்டுமென அன்பு வேண்டுகோள்  விடுக்கிறோம்.

நமது ஒன்று பட்ட சக்தியே போராட்டத்தின்  வெற்றியாக மாறும்.

போராட்ட வாழ்த்துக்களுடன்

J.R.  மாநிலச் செயலர் மாநிலச் சங்கத்திற்காக .