Sunday, January 29, 2012

SUCCESSFUL DINDIGUL DIVISIONAL CONFERENCE!


திண்டுக்கல் அஞ்சல் மூன்றின் 38  வது கோட்ட மாநாடு கடந்த 22.01.2012 ஞாயிறு அன்று  திண்டுக்கல் மேட்டுப்பட்டி பெரியார் தோட்டத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது .  மாநிலச் செயலர் தோழர் J.R. , அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர்.A. வீரமணி , தென் மண்டலச் செயலர் தோழர் . K.  நாராயணன் , மத்திய மண்டலச் செயலர் தோழர் A. மனோகரன்  , மாநில உதவிச் செயலர் தோழர் அம்பை தியாகராஜன், மாநில அமைப்புச் செயலர் தோழர் N. செல்வன் சுருக்கெழுத்தாளர் சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர் E.  முருகதாஸ்  மற்றும் P4 , GDS  கோட்டச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

கோட்டச் செயலர் பதவிக்கு மட்டுமே போட்டி  இருந்தது . தேர்தலில் தோழர்  V.  ஜோதி அவர்களும்  A. சங்கரன் அவர்களும்  போட்டி இட்டனர் . தோழர் V.  ஜோதி அவர்கள் 62 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இதர நிர்வாகிகள்  போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் . 


கோட்டத் தலைவர் : தோழர் . M.  பழனிச்சாமி , APM,  நிலக்கோட்டை HO 
கோட்டச் செயலர் :  தோழர் . V. ஜோதி ,  P.A., திண்டுக்கல்  H.O.
கோட்ட நிதிச் செயலர் : தோழர். P.  மைக்கேல் சகாயராஜ் ,P.A., திண்டுக்கல் H.O.

வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பணி சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !.