அன்புத் தோழா ! அலைகடலென படை திரட்டி வா !

பார் போற்றும் தலைவனுக்குப் பாராட்டு விழா !
தலைநகரில் விழா ! சென்னையிலே  விழா !
படை பெருத்ததோ ! பார்  சிறுத்ததோ ! எனப் 
பகை நடுங்கவே வா ! படை கொண்டுவா !
கொடி  கொண்டுவா ! பதாகையுடன் நீ வா !
தலைவன் விழா ! தலை மேல் கொண்டு நீ வா !
ஆம்.  ஆகத்து திங்கள்  ஐய்ந்தினிலே 
சென்னையிலே பெரு  விழா ! 
அலமேலுமங்கா  திருமண   மண்டபத்திலே 
அலங்காரத் திருவிழா !
அண்ணனின்  கோட்டைக் கொடியினிலே 
அலங்கார புட்பமென நீ வா !
வாழும் வரலாற்றை வாழ்த்திடவே 
நீ வா ! நீ வருவாய் !  எனக்குத் தெரியும் !
உன் வருவாய் ! என் மண  நாளென 
நான் காத்திருக்கிறேன் நீ வா !
மேள வாத்தியங்கள் முழங்கட்டும் !
வாண  வேடிக்கைகள்  நடக்கட்டும் !
வழியிலே மலர் தூவட்டும் !
வாசலெங்கும் வண்ண  மலர் பெருகட்டும்  !
வீதிதோறும் தோரணக் கொடிகள் தொங்கட்டும் !
வீர வாத்தியங்கள்  இன்று முழங்கட்டும் !
இந்த நாள் ! இனிய நாள் ! என்றுமே 
நம்  வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும் நன்னாள் !
வாழும் வரலாறே ! 
 வரலாற்றுப் பெட்டகமே !
பெட்டகத்தின் பொக்கிஷமே !
பொக்கிஷத்தின் பூம் பொலிவே !
பூம்  பொலிவின்  தாரகையே !
தாரகையின் தண்ணொளியே !
தண்ணொளியின் குளிர் நிலவே !
குளிர் நிலவின் தரு நிழலே !
வாழ்க  நீ எம்மான் ! இவ்வையத்துள் 
எந்நாளும் ! நீங்கா(து) உன் புகழ் தான் !
வாழ்த்துகிறேன் ஏழையென  நான் தான் !
வார்த்தையில்லை எனக்கு இனிதான் !
உன் அன்பின் அடி நான் தான் !
ஐயனே உன் தொண்டரென நான் தான் !
ஐயனே உன் தொண்டரென நான் தான் !
அன்பிலே என்றும் அருமைத் தம்பியென 
உன் அன்பு "ஜேயார்"  நான் தானே !

 
