Saturday, December 29, 2012

28.12.12 DEMONSTRATION SUCCESSFUL

2005 முதல் 2008 வரையில்  நேரடித்  தேர்வுக்கான  காலியிடங்களில் SCREENING  COMMITTEE  முடிவு அடிப்படையில் SCRAP  செய்வதாக முடிவெடுக்கப்பட்டு ,  நம்முடைய எதிர்ப்பினால்  இதுவரை , ஒழிக்கப்படாமலும்  அதே நேரம் நிரப்பப் படாமலும்  SKELETON  இல் வைத்திருந்த 17093  இலாக்கா பணியிடங்களை  தற்போது  நிதியமைச்சக உத்திரவு அடிப்படையில்  ABOLISH  செய்திட இலாக்கா உத்திரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து  முதல் கட்டமாக  நேற்று (28.12.12)  நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட மத்திய JCA   பணித்திருந்தது.

சென்னையில் CPMG  அலுவலக வாயிலில்  மதியம் சுமார் 1.00 மணியளவில்  மிகச் சிறப்பான ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  கிட்டத்தட்ட 300 தோழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது  மிகச் சிறப்பான நிகழ்வு.  NFPE  அஞ்சல் மூன்றின்  மாநிலச் செயலர்  தோழர்.J.R. அவர்களும்  FNPO  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். G.P. முத்துகிருஷ்ணன் அவர்களும் கூட்டுத் தலைமை ஏற்க , NFPE /FNPO  சம்மேளனங்களின்  அனைத்து மாநிலச் செயலர்களும்  கலந்துகொண்டு  கண்டன உரையாற்றினார்கள்.  சம்மேளன/அகில இந்தியச் சங்க நிர்வாகிகள்  தோழர். S . ரகுபதி , தோழர். NG , தோழர். A . வீரமணி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இதேபோல  மதுரை, திருநெல்வேலி, திருச்சி ,ஸ்ரீரங்கம், அரக்கோணம் , காஞ்சிபுரம், திருப்பத்தூர் , திருப்பூர், சேலம் மேற்கு  போன்ற இடங்களில்  சிறப்பான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக  மாநிலச் சங்கத்திற்கு  தகவல்  கிடைத்தது . இதர பகுதிகளில் இருந்து இன்னும் இந்த  நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வந்து சேரவில்லை . சம்மேளன அறைகூவலை ஏற்று, மாநிலச் சங்க அறைகூவலை ஏற்று,ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்திய  அனைத்து கோட்ட/ கிளைச் சங்கங்களுக்கும் , சென்னை பெருநகரில்  மிகச் சிறப்பான வகையில் அதிக எண்ணிக்கையில்  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட  தோழர்களுக்கும் , அதற்கு  ஊழியர்களை ஒருங்கிணைத்த  கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும்  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி. 

அரக்கோணம் கோட்டத்தில் 




                                                  திருநெல்வேலி கோட்டத்தில்