Tuesday, May 14, 2013

PL SEE THE LIVE DEBATE ON 15.05.2013 AT 11.00 A.M. IN CAPTAIN T.V.

'இந்திய அஞ்சல் துறையில்  வங்கித் திட்டம் முடக்கப்படுகிறதா ?'

அன்புத் தோழர்களுக்கு , இனிய வணக்கங்கள் ! நாளை (15.05.2013) காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நேரடி ஒளிபரப்பாக  CAPTAIN NEWS தொலைக் காட்சியில்  இந்திய அஞ்சல் துறையில் வங்கித் திட்டம் முடக்கப் படுகிறதா ? என்ற தலைப்பில்   ஒரு நேரடி விவாதம் (LIVE  TELECAST ) நடைபெற உள்ளது.  

இந்த விவாதத்தில்  நம்முடைய அகில இந்திய சங்கத்தின் செயல் தலைவர் தோழர். N . கோபாலகிருஷ்ணன் அவர்களும் , தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்  தலைவர்  திரு. A .M . விக்கிரமராஜா அவர்களும் , இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர்  திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களும்  கலந்து கொண்டு  விவாதிக்க உள்ளார்கள் . 

எனவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நம்முடைய தோழர்களுக்கு  இந்த செய்தியை  தெரிவிக்க வேண்டுகிறோம். இதன் மீதான உங்கள் விமரிசனங்களை  இந்த  வலைப் பதிவின்  'கமெண்ட்ஸ்' பகுதியில் அளித்திடவும் வேண்டுகிறோம்.