Monday, December 23, 2013

DIVISIONAL/BRANCH SECRETARIES MEETING OF NFPE UNIONS AT MADURAI ON 05.01.2014

அன்பார்ந்த கோட்ட/ கிளைச் செயலர்களே ! வணக்கம். !

மதுரை  மண்டலத்தில் மண்டல நிர்வாகத்தின் அடக்கு முறைகளை , சட்ட மீறல்களை , இலாக்கா விதி மீறல்களை , ஊழியர்கள் கொத்தடிமைகளாக நடத்தப் படுவதை  எதிர்த்து களம் காண 

தென் மண்டலத்தில் உள்ள NFPE  உறுப்பு சங்கங்களின் அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களின் ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 

05.01.2014 ஞாயிறு அன்று சரியாக 
காலை  10.00 மணியளவில் 
 மதுரை  தலைமை அஞ்சலக வளாகத்தில்
 நடைபெற  தமிழக அஞ்சல் - RMS  இணைப்புக் குழுவின் சார்பாக தீர்மானிக்கப் பட்டுள்ளது . 

இந்தக் கூட்டத்தில் NFPE  இன் அஞ்சல் - RMS  பகுதியின் அனைத்து மாநிலச் சங்க செயலர்களும் கலந்துகொள்வார்கள். 

அது போல NFPE இன் அஞ்சல் - RMS  பகுதியின் தென்மண்டல அனைத்து மண்டலஅளவிலான நிர்வாகிகள்   மற்றும் கோட்ட/ கிளைச் செயலர்கள்  கண்டிப்பாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு  தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறோம்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை  மதுரை கோட்ட அஞ்சல் மூன்று நிர்வாகிகள் ஏற்று நடத்திட அன்புடன் வேண்டுகிறோம். 

 இதற்கான  செய்தி அறிவிப்பு ஏற்கனவே  அலைபேசியின் குறுஞ் செய்தி மூலமும்  தொலைபேசி மூலம்  அனைவருக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

  செய்தி கிடைக்கவில்லை என்ற குறை எந்தப் பகுதியில் இருந்தும் வரக் கூடாது . மண்டலப் பொறுப்பாளர்கள் முனைப்புடன்  அனைத்துப் பகுதியினருக்கும் இதனை தெரிவிக்க வேண்டுகிறோம். 

கூட்டத்தில்  நிச்சயம்  நம் மீது  ஏவப்படும் தாக்குதல்களுக்கு  விடை காண  நாம் சரியான முடிவெடுப்போம்.  போர்ப்பரணி பாட  போராட்ட களம் நோக்கி  புறப்படுவோம். 

தோழமை வாழ்த்துக்களுடன் 

தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக்குழுவின் சார்பாக 

J . ராமமூர்த்தி, கன்வீனர் .