Thursday, July 31, 2014

WISHING A HAPPY RETIRED LIFE !

     
நம்முடைய  அஞ்சல்மூன்று சங்கத்தின் தென்மண்டல முன்னாள்செயலர் 

தோழர். K. நாராயணன் அவர்கள் (9894822912)  
PRI(P), தல்லாகுளம் HO

இன்று அரசுப் பணி நிறைவு பெறுகிறார். அவர்தம் காலத்தில் தென் மண்டலத்தில் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப் பட்டன என்பது தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் தெரியும். முழுமையான தொழிற் சங்க ஈடுபாடு, சுறுசுறுப்பு , எந்த செயலையும் உடனே செய்ய வேண்டும் என்ற ஆர்வம் , அனைத்து உயர் மட்ட தலைவர்களுடனும் நேரடி அறிமுகம் , சங்கத்தில் பிரச்சினைகள்  இருந்த காலத்திலும்  துவளாமல் செயல்பாடு. இவையே  தோழர் நாராயணின்   சிறப்புக்கள் ஆகும். அவர்தம் பணி நிறைவுக் காலம் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக அமைந்திட நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

இவருக்கான  கோட்டச் சங்கத்தின் மூலம் நடத்தப்பட உள்ள  பாராட்டு விழா எதிர்வரும் 15.08.2014 அன்று  மதுரையில் நடைபெற உள்ளது.


தாம்பரம்  அஞ்சல் மூன்று  கோட்டச் சங்கத்தின்  தலைவர் 

தோழர். D. ரமேஷ் (சேலையூர் ) அவர்கள் 

இன்று அரசுப் பணி நிறைவு பெறுகிறார்.நம் தொழிற் சங்கத்தில் நீண்ட காலம் பல பொறுப்புக்களில் இருந்து அனைத்து போராட்டங்களிலும் தன்னை முழுமையாக ஈடு படுத்திக் கொண்டுள்ள  ஒரு சிறந்த தோழர்  இவர்.  தாம்பரம் கோட்டத்தில் அனைத்து  தோழர்களின் நன்மதிப்பையும் பெற்றவர் ஆவார்.  இவர்தம் பணி நிறைவுக்காலம்  எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக அமைந்திட நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! இவரது பணிநிறைவு பாராட்டுவிழா  சென்னை  சேலையூரில் உள்ள  Camp Road MJL Function Hall ல்  மாலை சுமார்  5  மணிக்கு  நடைபெறுகிறது .

Add caption
செங்கல்பட்டு அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் தலைவர் 

தோழர்.S. வெங்கடேசன்  அவர்கள் 
APM ACCOUNTS, CHENGALPATTU HPO

இன்று அரசுப் பணி நிறைவு பெறுகிறார் . மூத்த தலைவர்களின் பணி நிறைவுக்குப் பிறகு செங்கல்பட்டு கோட்டச் சங்கத்தை கட்டிக் காத்த பெருமை இவருக்கு உண்டு.  எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டு  தொழிற்சங்க இயக்கத்தில்  ஒரு சிறப்பான முத்திரையை பதித்தவர் இவர்.  இவரது பணி நிறைவுக் காலம் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்பாக அமைந்திட  நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !