Friday, August 1, 2014

TAMBARAM P4 DIVISIONAL BRANCH GENERAL BODY MEETING

தாம்பரம் கோட்ட அஞ்சல் நான்கின் 
பொதுக் குழு மற்றும் கருத்தரங்கு 

தாம்பரம் அஞ்சல் நான்கு கோட்டச் சங்கத்தின் பொதுக் குழு , சங்க கொடிக்கான கல்வெட்டு திறப்பு மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சிகள்  கடந்த 29.07.2014 அன்று  காலை 10.00 மணி துவங்கி  சென்னை பல்லாவரம் அஞ்சலக வளாகத்தில்  , தாம்பரம் அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர். G . சுரேஷ் பாபு  அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டு சிறப்பாக நடத்தப் பட்டது. 

பொதுக் குழு மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சிகளுக்கு  தாம்பரம் அஞ்சல் நான்கின் தலைவர் தோழர். N . அனுமந்தன் அவர்கள் தலைமையேற்றார்.  சம்மேளனக் கொடியை  அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். K .V .ஸ்ரீதரன் அவர்களும், அஞ்சல் மூன்று சங்கக் கொடியை , அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர்.J . ராமமுர்த்தி அவர்களும், அஞ்சல் நான்கு சங்கக் கொடியை , அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர்  S . ரவிச் சந்திரன் அவர்களும் ஏற்றிவைக்க,  அஞ்சல் நான்கின் கோட்ட உதவிச் செயலர் தோழர். N . விஜயன் அவர்கள் வரவேற்புரையுடன்  நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின. 

பொதுக் குழு நிகழ்சிகளுக்குப் பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் 'ஏழாவது ஊதியக் குழுவின் கோரிக்கை மனுவின் அம்சங்கள்' குறித்து  நமது முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS  அவர்களும் , 'அஞ்சல் தொழிற்சங்கங்களின் ஒற்றுமையும் இன்றைய கடமையும்'  குறித்து  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R ., அவர்களும், 'தபால்காரர் கோரிக்கைகளும் தீர்வின் அவசியமும்' குறித்து  அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். S . ரவிச் சந்திரன் அவர்களும்,  'நீதி மன்ற வழக்குகளும் , தொழிற்சங்க கையாளுதல் களும் ' குறித்து அஞ்சல் மூன்றின் உதவிப் பொதுச் செயலர் தோழர். A .வீரமணி  அவர்களும் , 'MTS ஊழியர்களுக்கான உயர் ஊதியக் கோரிக்கைகள்' குறித்து அஞ்சல் நான்கின் மாநில உதவிச் செயலர் தோழர். A .M . நந்தகோபால் அவர்களும்  விளக்கிப் பேசினர்.

கருத்தரங்கு நிகழ்வில் அஞ்சல் மூன்றின் மாநில உதவித் தலைவர் தோழர். V . வெங்கட்ராமன், தாம்பரம் அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். B . செல்வகுமார் , GDS  மாநில உதவிச் செயலர் தோழர். S. விஜயகுமார், அம்பத்தூர் கிளைச் சங்க முன்னாள் தலைவர் தோழர். GCN , உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு  சிறப்பித்தனர்.  பல்லாவரம் தோழர். பாஸ்கரன் அவர்கள் நன்றியுரை  நல்கிட  நிகழ்ச்சிகள்  இனிதே நிறைவுற்றன. 

வேறு எந்தக் கோட்டத்திலும் இல்லாத வகையில் தாம்பரம் அஞ்சல் நான்கு கோட்டச் சங்கத்தில்  இந்த ஆண்டு புதிதாக 46 தோழர்களை சேர்த்து நம் சங்கத்தை மேலும் வலிமைப் படுத்திய  தாம்பரம் அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர். G . சுரேஷ் பாபு அவர்களுக்கு  நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்  வீர வாழ்த்துக்கள்.!

நிகழ்ச்சியின் போது  எடுக்கப் பட்ட சில புகைப் படங்களை கீழே பார்க்கலாம்.