Thursday, August 28, 2014

TN JCA (NFPE & FNPO) PROGRAMME ON 28.08.14 THROUGHOUT THE STATE

NFPE - FNPO 
JCA  வின் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் 
நாள் : 28.08.2014

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். எதிர்வரும் 28.08.2014 அன்று பொதுக் கோரிக்கைகள் மற்றும் பகுதி வாரிக் கோரிக்கைகளாக 39 கோரிக்கைகளை  வலியுறுத்தி நமது NFPE  மற்றும் FNPO  இரண்டு சம்மேளனங்களும் இலாக்கா முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்திட கோரி நாடு தழுவிய அளவில் 6 கட்ட போராட்டமும்  அறிவிக்கப் பட்டுள்ளது . 

கோரிக்கை மனு அளித்திடும் நாளில் , அதாவது 28.08.2014 அன்று JCA  சார்பில் தமிழகத்தின் ஒவ்வொரு கோட்ட/ கிளைகளிலும்  கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம். தமிழக JCA  சார்பில் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொள்ளும் ஆர்பாட்டம் 28.08.2014 அன்று  மதியம் உணவு இடைவேளையில் CPMG  அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.  

சென்னை பெருநகரத்தில் உள்ள அனைத்து அஞ்சல் - RMS  பகுதிகளில் உள்ள NFPE  மற்றும் FNPO  வின்  P 3, P 4 , R 3, R 4, ADMIN, ACCOUNTS, SBCO , GDS  சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் கண்டிப்பாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 

கீழே காணும் JCA அறிக்கையின் நகலை PRINT  செய்து அனைத்து தோழர்களுக்கும் அளிக்கவும். கோரிக்கைகள் மற்றும் அனைத்து  பொதுச் செயலர்களின் கையெழுத்துடன் அடங்கிய  கோரிக்கை மனுவின்  நகல் ஏற்கனவே  நமது வலைத்தளத்திலும், அகில இந்திய சங்க, மற்றும்  சம்மேளனங்களின் வலைத்தளத்திலும் பிரசுரிக்கப் பட்டுள்ளது.

இவற்றை அஞ்சல் மூன்று வலைத்தளங்கள் உள்ள கோட்டங்கள், தங்கள் வலைத்தளங்களில்  நகல் எடுத்து உடன் பிரசுரிக்கவும் .  போராட்டத்தை பரவலாக தமிழகம் முழுதும் நடத்திட வேண்டுகிறோம். அப்படி நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டக் கூட்டங்களின் புகைப்பட நகலை  மாநில சங்க EMAIL  முகவரிக்கு அனுப்பவும், அவை மாநிலச் சங்க வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.