Thursday, April 30, 2015

DIVISIONAL CONFERENCE OF AIPEU GR. C, KANCHIPURAM


காஞ்சிபுரம் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் 28ஆவது கோட்ட மாநாடு கடந்த 26.04.2015 அன்று காஞ்சிபுரம் தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது  மாநாட்டு நிகழ்வுகளுக்கு கோட்டச் சங்கத்தின் உதவித் தலைவர் தோழர். K . விஜயகுமார்  தலைமை தாங்கி நடத்தினார்.கோட்டச் செயலர் தோழர். K . உதயகுமார் மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். மாநாட்டில் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R ., மாநில நிதிச் செயலர் தோழர். A . வீரமணி, மாநில அமைப்புச் செயலர் தோழர்.  G . ராமமூர்த்தி, மற்றும் தோழர். K .A . அமீத், தோழர்.K . ராமசாமி உள்ளிட்ட  மூத்த தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாநாட்டு பொது அரங்கு  எதிர்வரும் 06.05.2015 முதல் நடைபெற  உள்ள கால வரையற்ற வேலை நிறுத்த விளக்க அரங்காக நடத்தப்பட்டது. மாநாட்டில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்                     : தோழர். T. மாணிக்கவேலு , DY  PM , KCM  HO 
கோட்டச் செயலர்    : தோழர். S . பாலாஜி, O .A .,  D.O., KCM 
நிதிச் செயலர்            : தோழர். U . மதன்குமார், P .A ., KCM  HO 

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகள் பணி  சிறக்க   மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !