Saturday, April 18, 2015

NEWS ON LATEST DEVELOPMENTS IN CIRCLE HEADQUARTERS

மாநிலச் சங்க செய்திகள் 
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! மாநில தலைமையகத்தில் நடக்கும் நிகழ்வுகளின் செய்திகளை கீழே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

16.04.2015 தமிழக அஞ்சல் -RMS  NFPE  இணைப்புக் குழு கூட்டம் 
=============================================================
கடந்த 16.4.2015 அன்று மாலை சென்னை எழும்பூர் RMS அலுவலகத்தில் தமிழ் மாநில NFPE  இணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்வரும் 06.05.2015 முதல் நடைபெறவுள்ள  PJCA  வின் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி-  
FNPO  வின் முடிவுக்கு இணங்க,
==============================
1, PJCA வால் அறிவிக்கப்பட்டபடி, மாநில தலைமையகத்தில்   NFPE/FNPO  தலைவர்களை அழைத்து வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்துவது.
2. NFPE /FNPO  மாநிலச் சங்கங்கள் கூட்டாக வேலை நிறுத்தம் குறித்து சுற்றறிக்கை வெளியிடுவது.
3. NFPE /FNPO  மாநிலச் சங்கங்கள் கூட்டாக வேலை நிறுத்தம் குறித்து சுவரொட்டி வெளியிடுவது.

மாநில COC  முடிவுக்கு இணங்க 
==============================

1. மண்டல ரீதியிலான பிரச்சார இயக்கம், அந்தந்த மண்டலங்களில் உள்ள பொறுப்பாளர்களுடன், மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட NFPE உறுப்பு சங்கங்களின்  மாநிலச் செயலர்கள் எதிர்வரும் 21.04.2015 முதல் 24.04.2015 வரை நான்கு நாட்கள்  கோட்ட ரீதியாக சென்று  பிரச்சார இயக்கம் மேற்கொள்வது . 
   மண்டல பொறுப்பு
================== 

சென்னை பெருநகர மண்டலம் : தோழர். K . ரமேஷ் , R 3 மாநிலச் செயலர்.
மேற்கு மண்டலம்                             : தோழர். J . இராமமூர்த்தி , P 3 மா. செயலர்.
மத்திய மண்டலம்                             : தோழர். B . பரந்தாமன் ,R 4 மா. செயலர் 
                                                                     : தோழர். R . தனராஜ் , GDS  மா. செயலர் .  
தென் மண்டலம்                                : தோழர். G .கண்ணன் , P 4 மா. செயலர்.   

திருச்சி, மதுரை , கோவை அஞ்சல் மூன்று மண்டலச் செயலர்கள் உடன் இது குறித்து  இதர சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு  சுற்றுப் பயண விபரம் தெரிவிக்க வேண்டுகிறோம் .     
         
2. 25.04.2015 அன்று சென்னையில் PJCA வால் அறிவிக்கப்பட்ட NFPE/FNPO  தலைவர்களை அழைத்து வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்துவது.

 17.04.2015 மாலை 03.00 மணியளவில் தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை 
===================================================

நமது தமிழக NFPE COC  யின் வேலை நிறுத்தத்தை ஒட்டி தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்பாக  மாநில நிர்வாகத்துடன்  பேச்சு வார்த்தை நடை பெற்றது .  அதில் நிர்வாக தரப்பில் அளிக்கப் பட்ட பதில் :-

1. நமது அனைத்து கோரிக்கைகளின் மீதும்  தல மட்டங்களில் இருந்து அறிக்கைகள் பெறப்பட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகவும்  ;

2. தமிழகத்தில் LSG  பதவி உயர்வு குறித்து நீதி மன்ற வழக்குகள் காரணமாக மேலும் சில விளக்கங்கள் DTE  க்கு அளிக்கப்பட்டுள்ள தாகவும் , அதனால் இந்தப் பிரச்சினையில்  சிறிது தாமதமாகலாம் என்றும் ;

3. LSG  தவிர LSG  யிலிருந்து  HSG  II,   HSG  II விலிருந்து HSG  I, இதேபோல  PM  GRADE I லிருந்து PM  GRADE  II, PM  GRADE  II விலிருந்து PM  GRADE III பதவி உயர்வுகளுக்கான DPC  விரைந்து முடிக்கப்படுவதாகவும் வரும் வாரத்தில் இவை  வெளியிடப்படும் என்றும் ;

4. DEPUTATIONIST  RELIEF  மற்றும்  AUDIT  OFFICE  CANTEEN  பிரச்சினைகள் 
CPMG ( கர்நாடகா) அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாகவும் ;

5. MC CAMISH  பிரச்சினைகள் குறித்து நம் மாநிலச் சங்கத்தின் கடிதத்தின் மீது ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , பெருமளவில் அதன் மீதான பிரச்சினைகளுக்கு தீர்வு தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது . நமது  மாநிலச் சங்கத்தின் கடிதத்திற்கு பதில் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது . அதன் நகல் கீழே தருகிறோம்.  கோட்ட/ கிளைச் செயலர்கள் இதனை நன்கு படித்துப் பார்த்து , இதன் மீதான தங்களது கருத்துக்களை ,உங்கள் கோட்டத்தில் இந்தப் பகுதியில் பணியாற்றும் ஊழியருடன் கலந்துகொண்டு,  உடன்  மாநிலச் சங்கத்திற்கு தெரிவித்திட வேண்டுகிறோம். இது அவசரம் . மற்றும் அவசியம் .

6. எதிர்வரும் 20.04.2015 க்கு பிறகு  CPMG  தமிழகம் வரும்போது இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு  செய்யப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

மாநிலச் செயலரின் நிகழ்ச்சிகள்

19.04.2015  - கோவை அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு 

20.04.2015  - இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி , CCR 

21.04.2015 - 24.04.2015 - வேலை நிறுத்த சுற்றுப் பயணம்.

25.04.2015 - சென்னை  வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் .

26.04.2015 - காஞ்சிபுரம் அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு .

27.04.2015 - புது டெல்லி பயணம் 

28.04.2015 -  பாராளுமன்றம் நோக்கிய பேரணி 

29.04.2015 - PJCA  வின்  DAK  BHAVAN  முன்பான தார்ணா .

30.04.2015 - டெல்லியில் இருந்து சென்னை வருகை .

01.05.2015 - சென்னை  - மே  தின நிகழ்ச்சிகள் .

02.05.2015-
03.05.2015 - NFPE  அஞ்சல் நான்கு மாநில செயற்குழு மற்றும் 
                     அஞ்சல் நான்கு மாநிலத் தலைவர் தோழர்.ஜெயராஜன் 
                      பணி  நிறைவு பாராட்டு விழா, சேலம் .

04.05.2015-
05.05.2015 - வேலை நிறுத்த தயாரிப்பு பணிகள் -சென்னை நகரம்.
06.05.2015 - வேலை நிறுத்தம் ஆரம்பம் 

10.05.2015- சேலம் மேற்கு அஞ்சல் மூன்று  கோட்ட மாநாடு.