Thursday, April 30, 2015

HISTORIC PARLIAMENT MARCH ON 28.04.2015 AT NEW DELHI BY ALL CENTRAL GOVT. EMPLOYEES ORGANISATIONS UNDER NC JCM

தொழிற் சங்க வரலாற்றில்  ஒரு மைல்  கல் !
50000 ஊழியர்களுக்குமேல் கலந்துகொண்ட  அனைத்து   மத்திய அரசு ஊழியர்களின்  பாராளுமன்றம் நோக்கிய பேரணி ! 
படை பெருத்ததோ  பார் சிறுத்ததோ  என எங்கு நோக்கினும் 
தொழிலாளர் வெள்ளம் !

தமிழகத்திலிருந்து  அஞ்சல் மூன்று மாநிலச் செயலர்  தோழர். J . இராம மூர்த்தி , அஞ்சல் மூன்று மாநில நிதிச் செயலர் தோழர். A . வீரமணி , அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் , AIPEU  GDS  NFPE மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் . மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழக பொதுச் செயலர்  தோழர் . M . துரைபாண்டியன் உள்ளிட்ட  அஞ்சல்,  வருமானவரித்துறை, AG  அலுவலகம், ராஜாஜி பவன் , சாஸ்திரி பவன் , MEDICAL  STORES  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக் கணக்கில் தோழர்கள் தோழியர்கள் கலந்துகொண்டனர் . தென்னக ரயில்வே பகுதியில் இருந்து SRMU , SRES  சங்கங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் கலந்துகொண்டனர் என்பது சிறப்பு. வட கோட்டச் செயலர் தோழியர்  ஏஞ்சல் சத்தியநாதன்  , கோட்டத் தலைவர் தோழர். மோகன் ஆகியோர் தலைமையில் பெருமளவில் சென்னை வட கோட்டத்தின் ஊழியர்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.