Thursday, December 23, 2010

ஈரோடு கோட்ட அஞ்சல் மூன்று மற்றும் GDS  மாநாடு - வெற்றி   மாநாடு !
ஈரோடு அஞ்சல் மூன்றின்  40 வது   ஈராண்டு கோட்ட மாநாடு கடந்த 19 .12 .2010  அன்று ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் வெகு சிறப்பாக  நடைபெற்றது .  மாநாட்டில்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர் J .R   மாநிலத் துணைச் செயலர்  தோழர் 
N. G .  மற்றும்  கோபி  செயலர்  தோழர்  மோகன்  பவானி   GDS   செயலர் தோழர் மகாலிங்கம்  உள்ளிட்ட பல்வேறு பகுதி தொழிற்  சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில்  புதிய POSTMASTER  CADRE   மற்றும்   நமது பொதுச்
செயலரின் CADRE  சீரைமப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள்
ஆழமாக விவாதிக்கப் பட்டன . நமது பொதுச் செயலர் KVS   அவர்களின் அயராத முயற்சியால் தற்போது நடப்பு ஈராண்டு காலத்தில் மட்டும் ஈரோடு கோட்டத்தில்  64  நேரடி எழுத்தர் பதவிகள் நிரப்பப் பட்டுள்ளதாகவும் ,  இதனால் கடந்த 10   ஆண்டு காலமாக நிலவி வந்த ஆட்பற்றாக்குறை கொடுமை களையப்பட்டுள்ளதாகவும் தோழர்கள் பலர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் .

புதிய நிர்வாகிகள் தேர்வு எந்தவிதப் போட்டியும் இன்றி  ஒருமனதாக நடைபெற்றது .
கீழ்க்  கண்ட  நிர்வாகிகள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

தலைவர் : தோழர். M . ரவிசங்கர்
கோட்டச் செயலர் :  தோழர்.  K . சுவாமிநாதன்
பொருளர் : தோழர். N . ஆனந்தகுமார்

இது போல்  GDS கோட்ட மாநாடும்  இதே நேரத்தில்  ஈரோடு சிவகிரியில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு மட்டும் போட்டி இருந்தது .
தலைவராக  தோழர். M . சத்ருக்கன்    40 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் .    இதர  நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப் பட்டனர் .

கோட்ட செயலர் : தோழர் . S . நடராஜன்
கோட்டப் பொருளர் : தோழர். M . அமிர்த மோகன் குமார்
புதிய நிர்வாகிகளுக்கு  நம் மாநிலச் சங்கத்தின்  வெற்றி  வாழ்த்துக்கள் .

....... தோழமையுடன்   J .R .   மாநிலச் செயலர்.