Tuesday, January 22, 2013

நலம் பெற வாழ்த்துகிறோம் !

நலம் பெற வாழ்த்துகிறோம் !
=====================================================================
நமது மாநிலச்  சங்கத்தின்  உதவி நிதிச்  செயலர்  
தோழர்.  C.P. திலகேந்திரன் (கோவை கோட்டம் )  அவர்கள் 
திடீரென்று ஏற்பட்ட  உடல் நலக் குறைவு காரணமாக  கடந்த 17.1.2013 அன்று கோவை  ராமகிருஷ்ணா  மருத்துவ மனையில்  அனுமதிக்கப்பட்டார். 

அவரது மூளையில்  ஏற்பட்ட ரத்தக் கட்டு காரணமாக  அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.  பின்னர்  மேல்  சிகிச்சைக்காக  கடந்த 19.1.2013 அன்று  திருவனந்தபுரம்  சித்திரைத்திருநாள்  மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு  நேற்றைய தினம் அவருக்கு  மூளையில்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டு   ரத்தக்கட்டு அகற்றப்பட்டது.  

தற்போது  நினைவு திரும்பியதாக  அங்கு சென்றிருக்கும் நம் தோழர்கள் மூலம் தகவல் கிடைத்தது . அவர் இனி நலம் பெறுவார் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்ததாக கோவை  தோழர். கருணாநிதி அவர்கள் தெரிவித்தார். 

நம் தோழர்  திலகேந்திரன் அவர்கள்  முழு நலம் பெற்று  நல்  வாழ்வும் நீண்ட  ஆயுளும் பெற்றிட  நம் மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த  வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கிறோம். 
======================================================================

கடந்த  17.1.13 அன்று  அலுவலகப் பணிக்காக கோட்டக் கண்காணிப் பாளருடன்  கல்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்த போது  சாலை விபத்து ஏற்பட்டு   நம் தோழர்கள்  சென்ற  வாகனம் தலை கீழாகக் கவிழ்ந்ததில்  

நமது செங்கல்பட்டு  அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் 
தோழர். G. ராமமூர்த்தி  அவர்களும்  
அவருடன் உடன் சென்ற கோட்டச் சங்க உதவிச் செயலர் 
தோழர். ராஜகுமரன்  அவர்களும் ,

உடற்காயங்கள்  ஏற்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். 
அதே வாகனத்தில்   சென்ற கண்காணிப்பாளர்  திரு . நடராஜன் அவர்களும் , உதவிக் கண்காணிப்பாளர்  திரு. ராமலிங்கம் அவர்களும் , ஓட்டுனர்  திரு . அருள்தாஸ்  அவர்களும்  அதிகம்  பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் . 

தற்போது  தோழர். ராமமுர்த்தி அவர்களும் , தோழர். ராஜகுமரன்  அவர்களும்  நலம் பெற்று  மருத்துவமனையில் இருந்து 
இல்லம் திரும்பியுள்ளார்கள். 

கண்காணிப்பாளர் எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில்  தீவிர சிகிச்சையில் உள்ளதாக  நம் தோழர்கள்  தெரிவித்தார்கள். 

  விபத்தில்  காயம் அடைந்த அனைவரும்  நலமுடன்  பூரண குணமடைய  நம் மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த  வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்கிறோம். 
======================================================================