Thursday, February 19, 2015

A REVIEW ON RELEASING OF PA DR EXAMINATION RESULTS IN TN CIRCLE

நேரடி  எழுத்தர் தேர்வு முடிவுகளும்  ஆட்பற்றாக்குறையும்
அஞ்சல் ஊழியர் போராட்டமும்  

ஒரு வழியாக  தமிழக அஞ்சல் வட்டத்தில் நேரடி எழுத்தர் தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது, புதிதாக பணியில் சேரும் ஊழியர்களை விட ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுக்கு  இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில்  இது  கிட்டத்தட்ட 50% ஆட்பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க  வழி ஏற்படுத்தியுள்ளது. ஒரு வகையில் இது  தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின்  மூன்று கட்ட போராட்டத்திற்கு  கிடைத்த  முதல் வெற்றியே  !  1 1/2 மாதங்கள் கிடப்பில் கிடந்த  தேர்வு முடிவுகள் , நம்முடைய  தமிழகம் தழுவிய போராட்ட  உந்துதலால் , ADDL  CHARGE  ஆக  வந்த  கர்நாடகா  CPMG  யின் கவனத்தை ஈர்த்து  உடன் தேர்வு முடிவுகள்  நம்முடைய மாநிலம் தழுவிய முதற்கட்ட போராட்டத்திற்கு அடுத்த நாளே  வெளியிடப்பட்டுள்ளது  நிச்சயம் நமக்குக் கிடைத்த வெற்றியே  !

 2010 க்குப் பிறகு  2014 ஆம் ஆண்டுதான் மிக அதிக அளவில் ஆளெடுப்பு நடைபெற்றுள்ளது. 2010இல் 1640 காலியிடங்கள் நிரப்பப்பட்டன.  2014 இல் நேரடி தேர்வில் மட்டும் 1306 காலியிடங்கள்  நிரப்பிட RESULT  வெளியிடப் பட்டுள்ளது.

நம்முடைய  சங்கம் கொடுத்த அழுத்தம் காரணமாக 2014 டிசம்பர் 31 வரையான  ANTICIPATED  VACANCY  யும் கணக்கில் எடுக்கப்பட்டு  இந்த  தேர்வுக்கான அறிவிப்பு  கடந்த வருடம் FEBRUARY மாதத்திலேயே செய்யப்பட்டது என்பது குறிப்பிட வேண்டிய  அம்சமாகும்.   தற்போது 1306 நேரடி  தேர்வு காலியிடங்களில் 864 காலியிடங்கள் அஞ்சல் பகுதி எழுத்தருக்கு  மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இது அறிவிக்கப் பட்ட 641  காலியிடங்களுடன்  RESIDUAL  காலியிடங்களும் , கடந்த ஆண்டில் நேரடி எழுத்தரில் நிரப்பப்படாத காலியிடங்களும் சேர்த்து  அறிவிக்கப் பட்டதாகும். இது நமக்கு கிடைத்த வெற்றியே !

 RMS  SORTER  - 287 மற்றும்   PA CO/RO - 52   PA SBCO  - 73 FGN  POST - 15  MMS - 8 மற்றும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு  RLO  - 7  காலியிடங்கள் நிரப்பிட  முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இது தவிர  LGO  விலிருந்து எழுத்தராக நடைபெற்ற  தேர்வுக்கான முடிவுகள் வெளிவர வேண்டும் . அதனை விரைவு படுத்திட நிர்வாகம் உடனடி முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதில்  280 காலியிடங்கள்  நிரப்பப்பட தேர்வு நடந்துள்ளது. இதில் தேர்வு பெற்று  ஊழியர்கள் வந்தால் அடுத்தது  25% சுமை  குறையும்.

மேலும் LSG  பதவி உயர்வு  இனியும் காலதாமதமின்றி அளித்திடவேண்டி  நாம் போராட்ட அறிவிப்பு செய்துள்ளோம். இந்தக் கோரிக்கையின் மீதும்  எதிர்வரும் 27.02.2015 இல்   மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு  நாம் வேலை நிறுத்த நோட்டீஸ்  அளிக்க உள்ளோம். 

LSG பதவி   உயர்வு அளிக்கப்பட்டால் , HSG  II , HSG  I  பதவிகள் -  புதிய  HSG  I  RECTT விதிகளின் படி நிரப்பப்பட்டால் , நிச்சயம் மேலும் 450 எழுத்தர் காலியிடங்கள்  இந்த ஆண்டு  சேர்த்து அறிவிக்கப்படும்.  இதில் மீதமுள்ள காலியிடங்கள்  நிரப்பிட  வாய்ப்பு ஏற்படும்.

 எத்தனையோ  GDS  ஊழியர்களின்  வழக்குகளில்  SLP  மேல்முறையீடு  செய்யவேண்டும் என்று  காலத்தையும் ,  இலாக்கா பணத்தையும்  வீணடித்து  டெல்லிக்கு  அதிகாரிகளை அனுப்பும்  மாநில நிர்வாகம் , LSG  பிரச்சினையில்  பலமுறை  கடிதம் எழுதியும்  DTE  இல் இருந்து பதில் வரவில்லை என்று  மூன்று ஆண்டுகளாக சாக்கு போக்கு சொல்வதை  நிறுத்தி,  உடனடியாக  DTE  க்கு ஒரு அதிகாரியை  பதில் பெறுவதற்கென்றே  அனுப்பிட  செய்ய  வேண்டும். அப்படி செய்வார்களா? 

இது ஊழியர்கள் பிரச்சினை ஆயிற்றே? அரசாங்க பணத்தை எப்படி விரயம் செய்ய முடியும் என்று  மாநில நிர்வாகம் நினைக்கிறது போலும் . நிர்வாக காரணங்களுக்கு பதில் பெற வேண்டுமென்றால் உடனே , அந்த நிமிடமே  EMAIL  இல் பதில் அனுப்ப வேண்டும் என்று  நிர்பந்திக்கும் நிர்வாகம் , பதில் அடுத்த நிமிடமே அனுப்பவில்லை என்றால் ' IT WILL BE VIEWED VERY SERIOUSLY'  என்று   MAIL  அனுப்பும் நிர்வாகம் , இந்தப் பிரச்சினையில் மட்டும் ஏன் ஆண்டுக்கணக்கில் இந்த சுணக்கம் காட்டுகிறது  ?  கீழ் மட்ட ஊழியர்கள்தானே என்ற அக்கறையின்மைதான்  காரணம் . "அவர்கள் "  பதவி உயர்வு என்றால்   ஒரே ஆண்டில் பலமுறை கூட  DPC  போடப் படுகிறதே ? 

"நோய் நாடி நோய் முதல் நாடி  அது  தணிக்கும் 
வாய் நாடி வாய்ப்பச் செயல் "

 என்கிறது  உலகப் பொதுமறையாம்  திருக்குறள். நோய் தீர்க்குமா நிர்வாகம் ?  போராட்டத்தில் தள்ளுமா நிர்வாகம் ? பொறுத்திருந்து பார்ப்போம் ? 27.02.2015  தேதியை நோக்கி பயணிப்போம். 

ஊழியர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பை இந்த  வலைத்தளத்தின் மூலம்  மாநில நிர்வாகத்திற்கு நாம் பதிவு செய்கிறோம்.