Thursday, February 26, 2015

PERMISSION GRANTED BY PMG, SR FOR CONDUCTING DHARNA AT R.O. PREMISES

அன்புத் தோழர்களுக்கு , வணக்கம் ! இன்று  இரு மாதங்களுக்கு ஒரு முறையான மதுரை மண்டல PMG அவர்களுடனான பேட்டி    நடைபெற்றது. நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் மண்டலச் செயலர் தோழர். தியாகராஜபாண்டியன் அவர்களும்  மாநில உதவிச் செயலர் தோழர். ஜேக்கப்ராஜ் அவர்களும்  கலந்துகொண்டார்கள்.  பேட்டியின் போது  நம்முடைய  மாநிலச் செயலர்  அளித்த கடித நகலை  PMG அவர்களிடம்  அளித்து முழு நாள்  தார்ணா  போராட்டத்தை  மண்டல அலுவலக வளாகத்தில் நடத்திடவும் , கோட்டங்களில்   தோழர்களுக்கு  விடுப்பு அளிக்க வேண்டியும்  பேசினர் . 

அதன் முடிவாக  உரிய விடுப்பு  கோட்டங்களில் அளிக்க அனுமதிப்பதாகவும்  மண்டல அலுவலக வளாகத்தில் தார்ணா  நடத்திட அனுமதிப்பதாகவும் PMG, SR  அவர்கள்  தெரிவித்துள்ளார்கள். இந்த செய்தியை  உடன் நம் வலைத்தளத்தில்  பிரசுரிக்குமாறு  நம்முடைய தென்  மண்டலச் செயலரும், மாநில  உதவிச் செயலரும்  கை பேசி மூலம் மாலை 05.30 மணியளவில்  மாநிலச் செயலரிடம் தெரிவித்தார்கள்.  எனவே தென் மண்டலத்தில் நம்முடைய முழுநாள் தார்ணா  
போராட்டத்தில்  தோழர்கள்  முழுமையாக கலந்துகொண்டு  போராட்டம்  சிறக்கச் செய்திட வேண்டுகிறோம்.