Sunday, May 8, 2016

DIVISIONAL CONFERENCE OF TIRUNELVELI DIVISIONAL BRANCH HELD ON 01.05.2016 AT PALAYANKOTTAI HPO PREMISES

திருநெல்வேலி அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் 43 ஆவது கோட்ட மாநாடு கடந்த 01.05.2016 அன்று பாளையங்கோட்டை தலைமை அஞ்சலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தி, அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் , அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். V . பார்த்திபன், அஞ்சல் மூன்று மாநில மகிளா  கமிட்டி தலைவர் தோழர். ஏஞ்சல் சத்தியநாதன், கணக்கு அதிகாரிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். செல்வராஜ்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள்  ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். 

கோட்டச் சங்கத்தின் தலைவர்  : தோழர். A . ஆதிமூலம் அவர்கள்  
கோட்டச் சங்கத்தின் செயலர் : தோழர். S .K . ஜேக்கப்ராஜ் அவர்கள்  
நிதிச் செயலர்  : தோழர். M . நமச்சிவாயம் அவர்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பணி சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களின் பார்வைக்கு.