Friday, October 5, 2012

CONCILIATORY TALKS BEFORE LABOUR COMMISSIONER

05.10.2012 அன்று காலை 11.00  மணியளவில்  சென்னை மத்திய தொழிலாளர் நல ஆணையர்  முன்னிலையில்  தமிழக JCA  சார்பில் அளிக்கப்பட  வேலை நிறுத்த  அறிவிப்பை ஒட்டி  நடைபெற்ற  முத்தரப்பு பேச்சு வார்த்தையில்  நிர்வாகத்தின் சார்பில்  திரு . M.  நாச்சிமுத்து , AD SR  அவர்களும்  ஊழியர் தரப்பில் 13 மாநிலச் செயலர்களும்  கலந்து கொண்டார்கள். 

நிர்வாகத் தரப்பில் CPMG TN  அவர்கள்  கலந்துகொள்ளாமல் ASST. DIRECTOR  ஒருவரை அனுப்பியது  சட்ட விதிகளுக்கு முரணானது என்பதை  தொழிலாளர் நல ஆணையர்  சுட்டிக் காட்டி எச்சரித்தார் .  ஊழியர் தரப்பில்  அளிக்கப்பட  ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு ,   அதன் மீதான விபரங்களை பொறுமையாக கேட்டறிந்தார்.  நாம் வைத்த  குற்றச் சாட்டுகளுக்கு  நிர்வாகத் தரப்பில்  பதில் ஏதும்  சரிவர அளித்திட இயலவில்லை .  

இதனை சுட்டிக் காட்டி , தொழிலாளர் நல ஆணையர் அவர்கள் ,  உடனடியாக CPMG TN  அவர்கள்  பேச்சு வார்த்தை நடத்தி  பிரச்சினை தீர்க்கப் படவேண்டும் என்று நிர்வாகத்திற்கு  உத்திரவிட்டார் . பேச்சு வார்த்தையின் முடிவுகளை உடன்  தமக்கு தெரிவிக்க வேண்டுமெனவும்  தெரிவித்தார் .  அதனடிப்படையில்  அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு  தேதி  தெரிவிக்கப் படும் என்றும்  பதிவு செய்யப் பட்டது

இது சம்பந்தமாக  தொழிலாளர் நல ஆணையர் முன் கையொப்பமிடப்பட்ட  MINUTES COPY  கீழே  உங்கள் பார்வைக்கு அளிக்கப் பட்டுள்ளது .