Wednesday, June 22, 2016

ALL INDIA POSTAL CASUAL, PART TIME CONTINGENT,CONTRACT WORKERS FEDERATION SOUTHERN REGION CONFERENCE GRAND SUCCESS !

கடந்த 19.6.2016 அன்று அகில இந்திய அஞ்சல் காசுவல் , பகுதி நேர மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர்களின்  தென் மண்டல மாநாடு  மதுரை NGO அலுவலக கட்டிடத்தில் அதன் மாநிலத் தலைவர்  தோழர். D . சிவ குருநாதன் அவர்கள் தலைமையில்  முழுநாள் மாநாடாக வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன் மாநிலத் செயலர்  தோழர். T .E .ரமேஷ் மற்றும் மாநாட்டு வரவேற்புக் குழு பொதுச் செயலராக  அஞ்சல் நான்கின் தென்மண்டலச் செயலர் தோழர். S.B.ராஜ்மோகன் அவர்கள் பொறுப்பேற்று மிகச் சிறப்பான வகையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

மாநாட்டு நிகழ்வில் அஞ்சல் மூன்றின் அகில இந்திய தலைவரும் மாநிலத் செயலருமான தோழர். J.R ., NFPE  இணைப்புக்கு குழுவின் கன்வீனரும் அஞ்சல் நான்கின் மாநிலச்  செயலருமான தோழர்  G. கண்ணன்,  AIPEU GDS சங்க அகில இந்திய துணைப் பொதுச் செயலரும் மாநிலத் செயலருமான தோழர். R . தனராஜ்,  சம்மேளனத்தின் முன்னாள் செயலரும் முன்னாள் அஞ்சல் மூன்று மாநிலச் செயலருமான தோழர். S . சுந்தரமூர்த்தி,  அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர். J. ஸ்ரீவெங்கடேஷ் , அஞ்சல் நான்கின்  மாநில உதவிச் செயலர் தோழர். G . சுரேஷ் பாபு  உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர். மாநாட்டில் சுமார் 300க்கும்  மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டது சிறப்பான நிகழ்வாகும்.

மாநாட்டில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில் சில உங்களின் பார்வைக்கு :-