Wednesday, June 22, 2016

DINDIGUL P3 & P4 DIVISIONAL CONFERENCES HELD ON 19.06.2016 A GRAND SUCCESS !

திண்டுக்கல் கோட்ட  அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களின் இணைந்த  கோட்ட  மாநாடுகளும்  AIPEU GDS சங்க திண்டுக்கல் பகுதி கன்வீனர் நியமனமும் ஒரு  சேர  கடந்த 19.6.2016 அன்று திண்டுக்கல் கிறிஸ்தவ வன்னியர்  மகாலில்  வெகு சிறப்பாக நடை பெற்றது .  மாநாட்டு  நிகழ்வுகளுக்கு  அஞ்சல் மூன்று கோட்டத் தலைவர் தோழர். பழனிச்சாமி மற்றும் அஞ்சல் நான்கு கோட்டத் தலைவர் தோழர். சாகுல் ஹமீது  ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர்.

மாநாட்டில் அஞ்சல் மூன்று சங்கத்தின் அகில இந்திய தலைவரும், மாநிலச் செயலருமான தோழர். J. R .,  சம்மேளனத்தின் செயல் தலைவர் தோழர். A . மனோகரன் , அஞ்சல் நான்கின் மாநில உதவிச் செயலர் தோழர். G . சுரேஷ் பாபு, GDS சங்கத்தின் அகில இந்திய துணைப் பொதுச் செயலரும் ,  மாநிலச் செயலருமான தோழர். R . தனராஜ், சுருக்கெழுத்தாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர் . முருகதாஸ், அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர். ராஜாராமன் , அஞ்சல் மூன்று மாநிலத் சங்கத்தின் முன்னாள் மாநில அமைப்புச் செயலர் தோழர்  K . சுப்ரமணியன்  உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

மாநாட்டில் நடப்பு  ஈராண்டு காலத்திற்கான  கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக   தேர்ந்தெடுக்கப்பட்டனர் . அவர்கள் பணி சிறக்க மாநிலத் சங்கத்தின்  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

அஞ்சல் மூன்று :-

தலைவர்                             : தோழர். M . பழனிச்சாமி 
கோட்டச்  செயலர்         :  தோழர். P . மைக்கேல் சகாயராஜ் 
நிதிச் செயலர்                  :  தோழர்.  V . ஜோதிகுமார் 

அஞ்சல் நான்கு :-

தலைவர்                             : தோழர்.  K . சாகுல் ஹமீது  
கோட்டச்  செயலர்          :  தோழர். B. ராஜசேகர்  
நிதிச் செயலர்                   :  தோழர். S . மதனகோபால் 

AIPEU GDS  சங்கத்தின் திண்டுக்கல் பகுதி கன்வீனர் :-
தோழர். M .S . செபாஸ்டின் .
நிகழ்வில் எடுக்கப்பட்ட  புகைப்படங்களில் சில  உங்கள் பார்வைக்கு .