Friday, March 29, 2013

SHIFT SYSTEM INTRODUCED IN AIR COMPLEX-FGN POST STOPPED

CHENNAI FOREIGN POST  இன்  அங்கமான  CHENNAI AIR COMPLEX பகுதியில் தீடீரென்று  காலை 06.00 முதல் இரவு 09.00 வரை SHIFT  SYSTEM  அறிமுகப் படுத்தப் பட்டு உத்திரவிடப்பட்டது. இதுவரை இந்தியா முழுதும்  எந்தவொரு FOREIGN  POST அலுவலகத்திலும் இப்படி நடைமுறையில் இல்லை . ஒவ்வொரு மணிக்கும் ஆங்காங்கே தபால் பெறப் பட்டு உடனடியாக அயல் நாட்டு அஞ்சல் பிரித்து அனுப்பப் படும் என்று அதன் இயக்குனர் உத்திரவிட்டார். 

ஆனால் CUSTOMS  பகுதியில் எந்த ஒரு தபால் அளிக்கப் பட்டாலும் 48 மணி நேர COOLING PERIOD க்கு பிறகே அது CHECK செய்யப்பட்டு அனுப்பப் படும் என்று விதி இருக்கும் போது உடனுக்கு உடன் தபால் கையாளப் பட எந்தவித தேவையும் இல்லை . 

இந்தப் பிரச்சினை வெடித்தபோது  உடன் இது குறித்து CPMG , TN  அவர்களிடம் NFPE  மற்றும் FNPO  மாநிலச் செயலர்கள் சென்று விவாதித்து கடிதம் அளித்தோம். CHENNAI  FOREIGN  POST  இன் NFPE  மற்றும் FNPO  கிளைச் செயலர்கள்  தோழர். D .ராய் , மற்றும்  தோழர் ஆறுமுகம் ஆகியோர் உடன் விவாதத்தில் கலந்து கொண்டனர். 

பிரச்சினையின் தன்மையை  முழுதும் புரிந்துகொண்ட CPMG அவர்கள்  இந்த உடனே இந்த உத்திரவு நிறுத்தப் படும் என்று உறுதி அளித்தார்கள் . அடுத்த வாரத்தில்  தானே நேரிடையாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு FOREGN  POST  அலுவலகம் சென்று கிளைச் செயலர்கள் மற்றும் ஊழியர்களுடன்  நேரிடையாக கலந்துரையாடி கருத்துக்கள் அறிந்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப் படும் என்று அறிவித்தார்கள் . 

FOREIGN  POST  இயக்குனரின்  தினப்படியான  குளறுபடியான உத்திரவுகளால்  தொழில் அமைதி கெடுவதை நாம் சுட்டிக் காட்டினோம். அதற்கு ஆவன நடவடிக்கை எடுப்பதாக CPMG  அவர்கள் உறுதி அளித்தார்கள்.  நாம் அளித்த கடிதத்தின் நகலை உங்கள் பார்வைக்கு கீழே தருகிறோம்.