Tuesday, August 13, 2013

AIPEU GDS(NFPE) DELEGATION MET HON'BLE CHIEF JUSTICE OF INDIA

மரியாதைக்குரிய  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. P . சதாசிவம் அவர்களை  நமது  தமிழ் மாநில AIPEU GDS (NFPE) சங்கத்தின் பிரதிநிதிகள்  கடந்த 03.08.2013 அன்று அவரது சொந்த ஊரான காடப்ப நல்லூரில்  நேரில் சந்தித்து  அவர்  பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர் . 

மேலும் 3 லட்சம் GDS  ஊழியர்களின் பணி  நிரந்தரம் குறித்து  அவரிடம் கோரிக்கை மனு அளித்துப் பேசினர் . அவரும்  இந்தப் பிரச்சினை குறித்து தனக்கு ஏற்கனவே நன்கு தெரியும்  என்றும் , நிச்சயம்  இந்த பிரச்சினையில்  தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாகவும்  உறுதி அளித்தார்.  

கீழே உள்ள புகைப் படங்களில்  வரிசைப் படி :-

தோழர். R . தனராஜ் , மாநிலச் செயலர் , AIPEU  GDS (NFPE ), தோழர். பச்சியப்பன் , முன்னாள் மாநில அமைப்புச் செயலர், அஞ்சல் மூன்று,  தோழர். மகாலிங்கம், மாநில உதவிச் செயலர், AIPEU  GDS (NFPE )