Tuesday, January 28, 2014

GOPI CONFERENCE AND FELICITATION TO COM.V.SENGOTTAIYAN, BRANCH PRESIDENT


பணி நிறைவு பெரும் தோழர். செங்கோட்டையன் நீடு வாழ 
மாநிலச் சங்கத்தின்  மனமார்ந்த வாழ்த்துக்கள்

கோபிசெட்டிபாளையம் கிளைச்சங்கத்தின் மாநாடும் கிளையின் தலைவர் தோழர் V.செங்கோட்டையன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும்

அஞ்சல் மூன்று கோபிசெட்டிபாளையம் கிளையின் தலைவர் தோழர் V.செங்கோட்டையன் அவர்கள் வரும் 31.01.2014 அன்று பணி ஓய்வு பெறுவதால் அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும் கோபிசெட்டிபாளையம் கிளையின் 19  வது மாநாடும் கடந்த  26.01.2014 ஞாயிற்றுகிழமை கோபிசெட்டிபாளையம் சீதா கல்யாண மண்டபத்தில்  காலை 9.00 மணியிலிருந்து  சிறப்பாக நடைபெற்றது. 

தோழர்.N.சுப்ரமணியன், துணைப் பொதுசெயலாளர் புது தில்லி,தோழர்.C.சஞ்சீவி ,மாநில உதவி செயலர் மற்றும்,மண்டலசெயலர் ,கோவை, தோழர் எபினேசர் காந்தி மாநில உதவி தலைவர், தோழர் A.ராஜேந்திரன்,மாநில அமைப்பு செயலர், தோழர்.M. மகாலிங்கம் ,மண்டல செயலர்,GDS (NFPE)  தோழர் K.சுவாமிநாதன் கோட்ட செயலர் ,ஈரோடு,தோழர் சந்திரசேகரன், கிளை செயலர் PSD, தோழர்.A.எழில்வாணன், கிளை செயலர்,பவானி உட்பட  பல தலைவர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்வில் தோழர் P.மோகனசுந்தரம் ,உதவி செயலர் P3 அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த பணி நிறைவு விழா தொடங்கி பின்  கிளைச்சங்கத்தின் மாநாடு தோழர். S.கார்த்திகேயன், செயலர் அவர்களின் ஆண்டறிக்கை சமர்ப்பித்தலுடன் இனிதே நடைபெற்றது. பின்பு நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தோழர்.T.கிருஷ்ணமுர்த்தி ,தலைவர்
தோழர். S.கார்த்திகேயன்,செயலர்
தோழர்.P.சுரேஷ் நிதி செயலர்

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநிலச் 
சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.