Wednesday, January 29, 2014

SECRETARY CONFEDERATION ATTENDING STRIKE MEETING AT I.T. AUDITORIUM, CHENNAI ON 31.01.2014

VENUE CHANGED

அன்புத் தோழர்களே ! நமது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொதுச் செயலரும் , நமது சம்மேளனத்தின் மாபொதுச் செயலரும், நமது அஞ்சல் மூன்றின் பொதுச் செயலருமான 

தோழர். M. கிருஷ்ணன் அவர்கள்  

கலந்துகொள்ளும்  வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் ஏற்கனவே எதிர்வரும் 03.02.2014  அன்று நக்கீரன் அரங்கத்தில்  நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.  

அது தற்போது சென்னை தேனாம்பேட்டை  காமராஜர் அரங்கம் எதிரில் உள்ள சாலையில்  அமைந்திருக்கும்  BEFI சங்கக் கட்டிடத்தில்  03.02.2014 அன்று மாலை  05.30 மணியளவில் துவங்கி நடைபெற உள்ளது என்று  தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் செய்தியை அனைத்து தோழர்களுக்கும் தவறுதல் இன்றி தெரிவித்திட வேண்டுகிறோம். சென்னை பெருநகர் பகுதியில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  நமது தோழர்கள் பெருமளவு  இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிட  ஏற்பாடு செய்திட வேண்டுமாய் அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்களையும்  வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
=============================================================
மேலும்  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயலரும் வருமான வரித்துறை அலுவலர் சம்மேளனத்தின்  மாபொதுச் செயலருமான 

தோழர் . K.P. ராஜகோபால் அவர்கள் 

கலந்துகொள்ளும் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்  சென்னை- 34 வருமானவரித்துறை  அலுவலகத்தின் AUDITORIUM HALL இல் எதிர்வரும் 31.01.2014 அன்று  மதியம்  01.15 மணியளவில் உணவு இடைவேளைக் கூட்டமாக நடைபெற உள்ளது . அனைத்து பகுதி தோழர்களுக்கும் இந்த செய்தியை தெரிவிக்கவும்.