Thursday, January 16, 2014

STRIKE RELATED POSTAL & RMS JCA MEETINGS AT TAMILNADU CIRCLE

 அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் .

எதிர்வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களின்,  50% பஞ்சப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு,  இடைக்கால நிவாரணம் வழங்குதல் , GDS  ஊழியர்களையும் ஊதியக் குழு வரம்புக்குள் கொண்டுவருதல் உள்ளிட்ட  15 அம்சக் கோரிக்கைகளின் மீதான 48  மணி நேர வேலை நிறுத்தத்தில்  கலந்துகொண்டிட  நமது  அஞ்சல் சம்மேளனங்களான NFPE மற்றும்   FNPO  ஆகியவை  அழைப்பு விடுத்துள்ளன . 

இது குறித்து தமிழக அஞ்சல் - RMS - MMS - GDS  அமைப்புகளின்  NFPE  மற்றும் FNPO மாநிலச் செயலர்களின் JCA   ஆலோசனைக் கூட்டம்  நாளை 17.01.2014 அன்று மாலை  சுமார் 06.00 மணியளவில்  சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற உள்ளது . இதில்  தமிழகத்தில் இந்த வேலை நிறுத்தத்தை  வெற்றிகரமாக நடத்திட முக்கிய முடிவுகள் எடுக்கப் படும் .

மேலும் எதிர்வரும் 03.02.2014 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில்   சென்னை   CPMG  அலுவலக வளாகத்தில்  உள்ள MEETING  HALL   இல்  நமது JCA   சார்பாக வேலை நிறுத்த  விளக்கக் கூட்டம்  நடைபெற உள்ளது . இதில்  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மா பொதுச் செயலரும் நமது  பொதுச் செயலருமான  தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு வேலை நிறுத்த உரை ஆற்றிட உள்ளார்கள் என்பதையும்  முன் கூட்டியே உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் .

 சென்னை  நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  பெருவாரியான தோழர்கள்  இந்தக் கூட்டத்தின்  தவறாமல் கலந்து கொண்டிட வேண்டுகிறோம் !

இதர  ஏற்பாடுகள் குறித்து  நாளைய JCA  கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அறிவிப்பு செய்யப் படும் .