Thursday, November 27, 2014

DIAMOND JUBILEE CELEBRATIONS OF NFPE AT TALLAKULAM HO BY P 3 DIVL BRANCH, MADURAI

சம்மேளன தினத்தன்று மதுரை மண்ணில் 
வைர விழா 

NFPE சம்மேளனத்தின் வைரவிழா  சிறப்புக் கூட்டம் மதுரை அஞ்சல்மூன்று கோட்டச்சங்கத்தின் சார்பில்  கடந்த 24.11.2014 அன்று  மாலை சுமார் 06.00 மணியளவில்  தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில்  கோட்டத் தலைவர் தோழர்.  முருகேசன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

மதுரை அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் செயலாளரும் , அஞ்சல்           மூன்றின் முன்னாள் மாநிலச் செயலர் மற்றும் அஞ்சல் மூன்றின்                   முன்னாள்  துணைப் பொதுச் செயலாளருமான  தோழர்.S . சுந்தரமூர்த்தி அவர்கள்  முன்னிலை வகித்து வரவேற்புரை யாற்றினார்.

விழா நிகழ்வில்  அஞ்சல் மூன்று சங்கத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற   மூத்த தோழர்கள்  பதினைந்திற்கும் மேற்பட்டோர்   கௌரவிக்கப் பட்டனர்.  விழாவின் முக்கிய நிகழ்வாக  நம்முடைய சம்மேளனத்தின் வரலாறு , இலாக்காவின்  இன்றைய நிலை, CBS , CIS  திட்டங்கள்,  IT MODERNISATION PROJECT  2012 , BIO  MATRIC  ATTENDANCE  SYSTEM , CENTRALIZED  PASS WORD  OPERATION MONITORING , 7TH  CPC உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தி அவர்கள்  நீண்ட  உரையினை அளித்தார்கள். 100 க்கும் மேற்பட்ட  தோழர்கள்  இரவு ஒன்பது மணிவரை  கலையாமல் அமர்ந்து கூட்டத்தின் நிகழ்வுகளை  அமைதியாக  செவியுற்றது மதுரை மண்ணுக்கே உள்ள   தொழிற்சங்க ஈடுபாட்டினை  பறை சாற்றியது என்றால் அது மிகையாகாது.

கூட்டத்தில் SBCO  சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். கார்த்திகேயன் , அஞ்சல் நான்கின்  கோட்டத் தலைவர் தோழர் குணசேகரன்,  அஞ்சல் நான்கின் மண்டலச் செயலர் தோழர்.  ராஜ்மோகன் ,  GDS  சங்கத்தின் மாநில உதவிச் செயலர் தோழர்.  ராஜசேகரன்  திண்டுக்கல் அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர். மைக்கேல்  சகாயராஜ்,  அஞ்சல் மூன்றின்  மாநிலச் சங்க முன்னாள் நிர்வாகி திண்டுக்கல் சுப்பிரமணியன் தேனீ அஞ்சல்  மூன்றின் கோட்டச் செயலர் தோழர். சிவமூர்த்தி  உள்ளிட்ட  சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .

விழா ஏற்பாடுகளை கோட்டச் சங்கத்தின் உதவிச் செயலர் தோழர். கிருஷ்ணமூர்த்தி  மிகச் சிறப்பாக செய்திருந்த விதம் பாராட்டுதலுக்குரியது.

சம்மேளன தினத்தன்று, வைர விழா வின் முத்தாய்ப்பாக  மதுரை மண்ணில் இந்த நிகழ்வுகளை நடத்திட்ட அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர்  தோழர் . S . சுந்தரமூர்த்தி அவர்களுக்கு   அஞ்சல் மூன்று மாநிலச்  சங்கத்தின்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  நிகழ்வில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள்  கிடைத்தவுடன்  இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.