Wednesday, November 12, 2014

FELICITATION TO COM. M.B. SUGUMAR, EX-CIRCLE SEC., NFPE R3, TN

RMS  மூன்று சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலரும், முன்னாள் அகில இந்திய சங்கத்தின் உதவிப் பொதுச் செயலரும் , முன்னாள் RMS 'M' கோட்டத்தின் செயலரும் ஆகிய அன்புக்குரிய தோழர் M .B . சுகுமார் அவர்களின் அரசுப் பணி  நிறைவு பாராட்டு விழா கடந்த 09.11.2014 அன்று சென்னை பூங்கா நகர் MEMORIAL  HALL  வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

RMS  மூன்றின் முன்னாள் மாநிலச் செயலரும்  அஞ்சல் RMS  இணைப்புக் குழுவின் முன்னாள் கன்வீனரும்  ஆகிய மூத்த தலைவர் தோழர் M . கண்ணையன் அவர்கள் தலைமை தாங்கி விழாவை சிறப்பித்தார். முதுபெரும் தலைவர் A .G . பசுபதி , சம்மேளனத்தின் உதவி மா பொதுச் செயலர் தோழர். ரகுபதி , அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தி, அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். பார்த்திபன்,  RMS  நான்கின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர் K . ராஜேந்திரன் , RMS  மூன்றின் மாநிலச் செயலர் தோழர். ரமேஷ் , RMS  நான்கின் மாநிலச் செயலர் தோழர். பரந்தாமன்  உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள்/ நிர்வாகிகள் கலந்துகொண்டு  தோழர் MBS  அவர்களின்  தொழிற் சங்கப் பணிகளை பாராட்டிப் பேசினார் . 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை பெருநகர மண்டலத்தின் PMG  திரு. மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த விழாவில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களை கீழே பார்க்கலாம் .