Friday, July 17, 2015

DEMONSTRATION BY AIPEU P4 TN CIRCLE IN FRONT OF O/O CHIEF PMG, TN ON 14.07.2015

ஊடகங்களின் மூலம் தபால்காரர்களை / தபால்துறையை இழிவு படுத்துகின்ற CCR PMG திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களை கண்டித்து 14.07.2015 மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை CPMG அலுவலகத்திற்கு முன்பாக NFPE  அஞ்சல் நான்கு  மாநிலச் சங்கத்தின் சார்பாக பெரும் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த  ஆர்பாட்டத்தில் அஞ்சல் மூன்றின் உதவிப் பொதுச் செயலரும் சம்மேளன உதவி மாபொதுச் செயலருமான தோழர்.S . ரகுபதி , அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், மாநில நிதிச் செயலர் மற்றும் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். A . வீரமணி, மாநில மகிளா  கமிட்டி கன்வீனர் தோழர். R மணிமேகலை  உள்ளிட்ட  நிர்வாகிகள் கலந்து கொண்டு போராடும் தோழர்களுக்கு அஞ்சல் மூன்று  மாநிலச் சங்கத்தின் ஆதரவினை தெரிவித்தனர். மிகச் சிறப்பாகவும் எழுச்சியுடனும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலர் தலைமையகத்தில் இல்லாத காரணத்தால் இதில் கலந்துகொள்ள இயலவில்லை. நிகழ்வின் சில புகைப்படங்கள் :-