Thursday, March 31, 2016

OUR HEARTFUL WISHES ON THE EVE OF SUEPERANNUATION OF OUR SENIOR COMRADES !

பணி நிறைவுப் பாராட்டு !

தோழர். மீனாட்சிசுந்தரம் , கிளைச் செயலர் , ஸ்ரீ வைகுண்டம் 
தலைமை அஞ்சலக அதிகாரி, ஸ்ரீவைகுண்டம்  H .O .
கை பேசி  9976298303

இன்று இலாக்காவில் இருந்து  பணி  நிறைவு பெறும் நம்முடைய அன்புக்கும்  பெருமதிப்புக்கும் உரிய மூத்த தோழர். மீனாட்சிசுந்தரம் அவர்கள் ( திருநெல்வேலி PSD  கிளையின் செயலராகவும் ஸ்ரீவைகுண்டம் கிளையின் செயலராகவும்  பலகாலம்  சிறப்பான பணியினை  நம்முடைய NFPE  பேரியக்கத்திற்கு அளித்துள்ளார். இனியவர்.  பண்பாளர்.  அதே நேரம் தொய்வில்லாத தொழிற்சங்கப் போராளி. இவரால் பலனடைந்த தோழர்கள் ஏராளம் . ஏராளம்.

தோழர். மீனாட்சி அவர்களின்  அரசுப் பணி  நிறைவு நாளில் அவரது சிறப்பான  சேவைகளை நினைவு கூறுகிறோம்.  அவருக்கு  நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்  நெஞ்சார்ந்த  வாழ்த்துக்கள்  ! அவர் எல்லா நலனும்  வளமும்  பெற்று  நீடு  வாழ  வாழ்த்துகிறோம்  !.

தோழர். P .K . இராமசாமி ,  நாமக்கல் கோட்டச் சங்க முன்னாள்  செயலர்
தலைமை  அஞ்சலக அதிகாரி, திருப்பூர்  H .O 
 கைபேசி  9442122431

இன்று  இலாக்காவிலிருந்து பணி  நிறைவு பெறும் அன்புக்கும் பெரு  மதிப்புக்கும் உரிய  மூத்த தோழர்   PKR  என்று அன்புடன் அழைக்கப் படும் தோழர் . P .K . இராமசாமி அவர்கள்  நாமக்கல் கோட்டச் செயலராகவும், திருச்செங்கோடு கிளைச் செயலராகவும்  திருப்பூர்  கோட்டச்  சங்கத்தின் உதவித் தலைவராகவும்  பலகாலம்  சிறப்பாகப் பணியாற்றி  நம் NFPE இயக்கத்திற்கு  வலுச் சேர்த்துள்ளார்.  GDS  ஊழியர்களின் பிரச்சினைகளுக்காக தொய்வில்லாத பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.  AIPEU GDS NFPE  சங்கத்தின் முதல் தமிழ் மாநில மாநாட்டை  நாமக்கல் கோட்டத்தில்  மிகச் சிறப்பாக நடத்தி   பெரும் தலைவர்களின் பாராட்டையும் நன் மதிப்பையும்  பெற்ற சிறந்த தோழர். இனியவர். பண்பாளர் .  சிறந்த  உழைப்பாளி . 

தோழர். PKR  அரசுப் பணி  நிறைவு செய்திடும் இந்நாளின் அவரது சேவைகளை நினைவு கூறுகிறோம். அவருக்கு  நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்  நெஞ்சார்ந்த  வாழ்த்துக்கள்  ! அவர் எல்லா நலனும்  வளமும்  பெற்று  நீடு  வாழ  வாழ்த்துகிறோம் ! .