Monday, March 7, 2016

RETIREMENT FELICITATION TO COM. S. DHANASEKARAN, BR . SEC., RANIPET BR & GENERAL BODY MEETING

நமது ராணிப்பேட்டை  அஞ்சல் மூன்றின் செயலாளர் தோழர். S . தன சேகரன் அவர்கள் கடந்த 29.2.2016 அன்று அரசுப்  பணியினை நிறைவு செய்தார். அவர் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக நம் தொழிற் சங்கத்தில் ஆற்றிய சிறப்பான  பணியினை நினைவு கூறும் வண்ணம் அவருக்கு ராணிப்பேட்டை  அஞ்சல் மூன்று கிளையின் சார்பாக  ஒரு பாராட்டு விழா  06.03.2016 அன்று  ராணிப்பேட்டை  ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  

அதே நேரத்தில் அவரது அரசுப்  பணி  ஓய்வின் காரணமாக காலியாகும் கிளைச் செயலர் பதவிக்கு, புதிய செயலர் தேர்வு செய்யும் பொருட்டு பொதுக் குழுக் கூட்டமும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த நிகழ்வுகளுக்கு  ராணிப்பேட்டை  அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர்.  V .K நரசிம்மன் அவர்கள் தலைமை வகித்தார். உதவிச் செயலர் தோழியர்.  N . சுசீலா வரவேற்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில்  நமது அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர் . KVS , அகில இந்தியத் தலைவர் மற்றும் மாநிலச் செயலர் தோழர். J . இராம மூர்த்தி ,  அகில இந்திய உதவிப் பொதுச் செயலர்  மற்றும் மாநில நிதிச் செயலர்  தோழர். A . வீரமணி, மாநில உதவிச் செயலரும் வேலூர் கோட்டச் செயலருமான தோழர் . S . வீரன்,  அஞ்சல் மூன்று  ஆரணி கிளைச் செயலர் தோழர். M . சிவகுமார்,  அரக்கோணம் கோட்டச் சங்க அஞ்சல் மூன்று தலைவர் தோழர். V . நடராசன், அரக்கோணம் கோட்டச் சங்க நிதிச் செயலர் தோழர். M . லெனின், துணைத் தலைவர் தோழர் .S . மலர்வண்ணன், அரக்கோணம் அஞ்சல் மூன்று கோட்டச் சங்க முன்னாள் செயலர் தோழர். ஆனந்தன் , ராணிபேட்டை முன்னாள் கிளைத் தலைவர் தோழர். M . நாகராஜன், முன்னாள் நிர்வாகி தோழர். K . சிவகுமார், அரக்கோணம் அஞ்சல் நான்கு கோட்டச் செயலர் தோழர் . தனஞ்செழியன், ராணிபேட்டை அஞ்சல் நான்கு செயலர் தோகர். R .G . குமார்,  தலைவர் தோழர். R . ஆனந்தன்,  GDS  ராணிபேட்டை கிளைச் செயலர் தோழர் .B . ஏகாம்பரம் , தலைவர் தோழர். T. G . மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு  தோழர்.  தனசேகரன் அவர்களின் சேவையைப் பாராட்டிப் பேசினார். தோழர். R . இளங்கோ , SPM ராணிபேட்டை பஜார் அவர்கள் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. 

நடைபெற்ற பொதுக்  குழு கூட்டத்தில் நடப்பு காலத்திற்கான கிளையின் செயலராக  , தற்போதைய நிதிச் செயலர்  தோழர். A .I .முகமது இலியாஸ்  (S .A . ராணிப்பேட்டை )  அவர்களும்  நடப்பு  காலத்திற்கான  கிளையின் நிதிச் செயலராக  தோழர்.K . ஜோதி (S .A . ராணிப்பேட்டை ) அவர்களும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள். ! நிகழ்வில் எடுக்கப் பட்ட புகைப் படங்களின் சில உங்களின் பார்வைக்கு  கீழே  தருகிறோம்.