Thursday, September 5, 2013

GENERAL BODY MEETING OF AIPEU GR.C , ARAKKONAM DIVL. BRANCH

கடந்த 01.09.2013 அன்று அரக்கோணம் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் ,  கோட்டத் தலைவர் தோழர். மலர்வண்ணன் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது .  பொதுக் குழுக் கூட்டத்தில் அஞ்சல் மூன்று மாநிலச்சங்கத்தின் முன்னாள் உதவித் தலைவர் தோழர்.Eவெங்க டேசன் அவர்களும் , அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்களும்,  ராணிப்பேட்டை கிளையில் தலைவர் தோழர் G . மணி அவர்களும், கிளையின் செயலர் தோழர் தனசேகரன் அவர்களும்   கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாறிவரும் சூழலில்  இலாக்காவின் இன்றைய நிலை குறித்தும்  , தொழிற்சங்கத்தின் கடமை குறித்தும் மாநிலச் செயலர் அவர்கள்  சிறப்புரை  நிகழ்த்தினார்.  

இறுதியில்  காலியாக உள்ள கோட்டச் செயலர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.  தேர்தலில்  இளைய தோழர்.  P . குமார் அவர்கள் போட்டியிட்டு  வெற்றி பெற்றார் .  பொதுக் குழு சிறப்பாக நடைபெற  உதவிய  அனைத்து தோழர்களுக்கும் , குறிப்பாக  கோட்டத் தலைவர் தோழர் மலர்வண்ணன் அவர்களுக்கும் , முன்னாள் கோட்டச் செயலர் தோழர். A . குமரன் அவர்களுக்கும்  புதிய கோட்டச் செயலர் தோழர்  குமார் அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். பொதுக் குழுவில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களை கீழே காண்க .