Tuesday, December 30, 2014

SPECIAL MEETING AT SRIRANGAM DIVISION HOSTED BY P3 DIVISIONAL BRANCH

திருவரங்கம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில்  அஞ்சல் மூன்று பொதுச் செயலர் தோழர். N.S. அவர்கள் கலந்துகொண்ட சிறப்பு கருத்தரங்கம் !

28.12.2014 அன்று திருவரங்கம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கத்தில் அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர் N. சுப்ரமணியன் அவர்கள் கலந்துகொண்டு ஏழாவது ஊதியக் குழு முன்னர் நாம் அளித்த கோரிக்கை மனு மற்றும் நமது அஞ்சல் துறையின் இன்றைய நிலை குறித்து மிக விரிவானதொரு சிறப்புரை ஆற்றினார். அதன்பின் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திருவரங்கம் தோழர், தோழியர்களின் கேள்விகளுக்கு பொதுச் செயலர் தோழர் N. சுப்ரமணியன் அவர்கள் சிறப்பாக பதில் அளித்தார்கள்.

இந்த சிறப்பு கருத்தரங்கத்திற்கு அஞ்சல் மூன்று கோட்டத் தலைவர் தோழர் .
K. கதிர்வேல் அவர்கள் தலைமை தாங்கினார். கோட்டச் செயலர் தோழர். 
C. சசிகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிதிச்செயலர் தோழர் V. ஸ்ரீதரன் அவர்கள் நன்றி கூற சரியாக மதியம் 3.30க்கு தொடங்கிய சிறப்பு கருத்தரங்கம் இரவு 07.30 மணிக்கு இனிதாக முடிவுற்றது. 

நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களின் நகல்களை கீழே பார்க்கலாம் .