Monday, December 29, 2014

TAMBARAM P3 DIVISIONAL CONFERENCE A GRAND SUCCESS !

தாம்பரம் அஞ்சல் மூன்று ஈராண்டு கோட்ட மாநாடு கடந்த 28.12.2014 அன்று  காலை சுமார் 11.00  மணியளவில் துவங்கி  கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர். N . மாடசாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  கோட்டச் செயலர் தோழர். B . செல்வகுமார் அவர்களும்  கோட்டச் சங்க நிதிச் செயலர்  தோழர். M .D. ஜான் பால்ராஜ் அவர்களும்   மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக  செய்திருந்தனர். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக  அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர்  K .V .S . அவர்களும் , அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களும் அஞ்சல் மூன்றின் அகில இந்திய உதவிச் செயலரும்  மாநில நிதிச் செயலருமான தோழர். A . வீரமணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கோட்ட மாநாட்டில் நடப்பு ஈராண்டுகளுக்கான நிர்வாகிகளாக கீழ்க் கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

கோட்டத்  தலைவர் : தோழர். N . மாடசாமி 
கோட்டச் செயலர்    : தோழர். B . செல்வகுமார் 
நிதிச் செயலர்           : தோழர். M .D. ஜான் பால்ராஜ் 

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! மாநாட்டு நிகழ்வில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களின்  நகல்களை கீழீ பார்க்கலாம் .