Friday, April 11, 2014

CIRCLE OFFICE REPORTS THAT THE SPEED DELIVERY ORDERED ON HOLIDAY IS NOW CANCELLED


தமிழ் வருடப் பிறப்பு அன்று தென் மண்டலத்தில் உத்திரவிடப்பட்ட துரித அஞ்சல் பட்டுவாடா ரத்து ! மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு வெற்றி !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.  தென் மண்டலத்தில்  தமிழ் வருடப் பிறப்பு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி அன்று துரித அஞ்சல் பட்டுவாடா செய்திட உத்திரவு இடப்பட்டிருந்தது .  இது  குறித்து  நாம்  அளித்த கடிதம்  கீழே  பிரசுரிக்கப் பட்டுள்ளது. 

ஊழியர்கள்  பண்டிகை காலங்களில் கூட பணி  செய்திட  உத்திரவிட்டு கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளதாக  நாம் ஏற்கனவே கடிதம் மூலமும், MEMORANDUM மூலமும் , இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி மூலமும்  பிரச்சினையை  CPMG  மற்றும்  PMG , SR  இடம் எடுத்துச் சென்றதை நீங்கள் அறிவீர்கள்.  

தற்போது CPMG அலுவலகத்தில் இருந்து  விடுமுறையில் ஊழியர்கள் பணிக்கு அழைக்கப் படுவதை நிறுத்திட  உத்திரவு  தென் மண்டலத்திற்கு அளித்துள்ளதாகவும், மேலும்  தற்போது இடப்பட்டுள்ள  தமிழ் வருடப் பிறப்பு பட்டுவாடா  உடன் ரத்து செய்திட உத்திரவு  அளிக்கப் பட்டுள்ளதாகவும் நமக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் தென் மண்டல அலுவலகத்தை  நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  பேசியதில் , PMG  அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் , இது குறித்து  APMG  STAFF  அவர்கள்  DPS  அவர்களுடன் கோப்பினை எடுத்துச் சென்று பேசுகிறார் என்று  தகவல் தற்போது  அளிக்கப் பட்டுள்ளது . தென் மண்டல உத்திரவினை இனி  எதிர்பார்க்கலாம்.(நேரம் : மாலை 04.20 - 11.04.2014 )