Monday, September 22, 2014

MANNARGUDI P3 BRANCH CONFERENCE ON 21.09.2014

நமது அஞ்சல் மூன்று மன்னார்குடி கிளையின் 28 ஆவது மாநாடு கடந்த 21.09.2014 அன்று காலை மன்னார்குடி தலைமை அஞ்சலக வளாகத்தில், மன்னை  கிளையின் தலைவர் தோழர். C . சீலன் ராஜ் அவர்கள் தலைமை யில் சிறப்பாக நடைபெற்றது. ஈராண்டு  அறிக்கையை  கிளையின் செயலர் தோழர். R . சேதுராமன் சமர்ப்பிக்க, வரவு செலவு கணக்கை கிளையின் நிதிச் செயலர் தோழியர்.  V . பிரியா சமர்ப்பித்தார். இதன் பின்னர் மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தி அவர்களால் நடத்தப் பட்ட  நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி  நடைபெற்றது. கீழ்க்காணும் தோழர்கள் நடப்பு ஈராண்டு களுக்கான  நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

கிளைத் தலைவர் :  தோழர். C . சீலன்ராஜ் 
கிளைச் செயலர்  ;  தோழர். R . சேதுராமன் 
நிதிச் செயலர் : தோழியர் . V .  பிரியா 

மாநாட்டில் மாநில உதவி நிதிச் செயலர் தோழர். R . பெருமாள் , தஞ்சை கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர். M . ராஜேந்திரன், கோட்டச் செயலர் தோழர். S . செல்வகுமார், பொருளர் தோழர். மணி, பாபநாசம் கிளைத் தலைவர் தோழர்.V . ஸ்ரீராம், கிளைச் செயலர் தோழர் . J . குணசீலன், மன்னை  அஞ்சல் நான்கின் செயலர் தோழர். N . கார்த்திகேயன், தஞ்சை அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர். P . மாரிமுத்து ,மன்னை  அஞ்சல் மூன்றின் முன்னாள் தலைவர் தோழர். இளங்கோவன், திருத்துறைபூண்டி கிளைச் செயலர் தோழர். அன்பழகன், மயிலாடுதுறை  அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் தோழர். P . ரவிச்சந்திரன்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார் .

புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க  மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! மாநாட்டில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்கள் கீழே பார்க்கவும் .