Monday, September 29, 2014

PAPANASAM AND PALANI BRANCH CONFERENCES HELD ON 28.09.2014

பாபநாசம் அஞ்சல் மூன்று கிளை மாநாடு 

பாபநாசம் அஞ்சல் மூன்று கிளையின் 17 ஆவது ஈராண்டு மாநாடு கடந்த 28.09.2014 அன்று பாபநாசம் தலைமை அஞ்சலகத்தில் அதன் கிளைத் தலைவர் தோழர் V . ஸ்ரீராம் அவர்கள் தலைமையில், கிளைச் செயலர் தோழர். J . குண சீலன் அவர்கள் வரவேற்புரையாற்ற,   சிறப்பாக  நடைபெற்றது. 

மாநாட்டில் மாநிலச் சங்கத்தின் உதவி  நிதிச் செயலரும், குடந்தை அஞ்சல் மூன்று கோட்டச் செயலருமான தோழர். R . பெருமாள்,  தஞ்சல் அஞ்சல் மூன்று  கோட்டத்  தலைவர் தோழர். M . ராஜேந்திரன், கோட்டச் செயலர் தோழர். S . செல்வகுமார், நிதிச் செயலர் தோழர். மணி,  மயிலாடுதுறை அஞ்சல் மூன்றின் கோட்டத்  தலைவர் தோழர். P . ரவிச்சந்திரன், கோட்டச் செயலர் தோழர். K .  துரை , நிதிச் செயலர் தோழர். K . வெங்கடேஷ் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

கிளைச் சங்க மாநாட்டில் கீழ்க் காணும் நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

தலைவர் :                 தோழர். J . குணசீலன் ,  SPM , அய்யம்பேட்டை S .O .
கிளைச் செயலர் : தோழர். D.R  லெனின் , P .A ., அய்யம்பேட்டை  S .O .
நிதிச் செயலர் :       தோழர். V .S. சரவணன் , P .A ., பாபநாசம் HO  

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
=====================================================================

பழனி  அஞ்சல் மூன்று கிளை மாநாடு 

பழனி  அஞ்சல் மூன்று கிளைச் சங்கத்தின் 27ஆவது கிளை மாநாடு  கடந்த 28.09.2014 அன்று  பழனி தலைமை அஞ்சலகத்தில்  அதன் தலைவர் M . கோபாலக்ருஷ்ணன் தலைமையில்  செயலர் தோழர். ASM . ராஜ்குமார் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

கிளைச் சங்க மாநாட்டில் கீழ்க் காணும் நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

தலைவர் :                 தோழர். M . கோபாலகிருஷ்ணன்,  PRI (P ), பழனி HO 
கிளைச் செயலர் : தோழர்.  K . சுப்பிரமணியன் , TRR , பழனி HO .
நிதிச் செயலர் :       தோழியர். K . கீதாமணி , P .A ., நரிக்கல்பட்டி S .O .

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
=====================================================================