Friday, May 25, 2012

இரண்டு மாதங்களில் ................

அன்புத் தோழர்களே !  வணக்கம் !

எதிர்வரும் JUNE   மற்றும் JULY 2012 என்ற இரு மாதங்களில் நம் மாநிலச் சங்கம் ஏற்று/பங்கு கொண்டு  நடத்த விருக்கும்  நிகழ்வுகள் :-

1. சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளரின் ஊழியர் விரோத , சட்ட  விரோத  நடவடிக்கைகளைக் கண்டித்தும்  , அவரது ஊழல்  நடவடிக்கை களை   எதிர்த்தும்   அவர்மீது நடவடிக்கை கோரி மேற்கு  மண்டல  அளவில்  தர்ணா  போராட்டம் .

2. 23.06.2012 மற்றும் 24.06.2012  இரு நாட்களில்  வேலூர் நகரில்  அஞ்சல்  மூன்றின்  மத்திய செயற்குழு .

3. NFPE  சம்மேளனத்தின்  தென் பிராந்திய  தொழிற்சங்க பயிற்சி முகாம் -
மேற்கு மண்டலத்தில்.

4. 26.07.2012 அன்று அடுத்த ஊதியக் குழு அமைத்திடக் கோரி  புது  டெல்லியில்  நடைபெற உள்ள  பாராளுமன்றம்  நோக்கிய  பேரணிக்கு  தமிழகத்தில் இருந்து அதிக  அளவில் ஊழியர்களைத் திரட்டுதல் .

(அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களும் உடனடியாக ரயில் பயணத்திற்கான  TICKET  ஐ  பதிவு  செய்யவும் . இல்லையெனில்  WAITING LIST  வந்துவிடும் .)

5. AIPEU GDS NFPE  சங்கத்தின்  முதல் மாநில  மாநாடு .

6. நம்முடைய ஒப்பற்ற  தலைவர் அறிவு ஜீவி  அஞ்சல் மூன்றின்  பொதுச்  செயலர்  தோழர் KVS  அவர்களுடைய  அரசுப் பணி  நிறைவுப் பாராட்டு 
விழா .

அன்புத் தோழர்களே !  மிகப் பெரிய பொறுப்புகள்  மாநிலச் சங்கத்தின்  தலையில் !  அதுவும்  இரண்டு மாதங்களுக்குள்ளே !

நீங்கள் உதவுவீர்கள்  என்ற  நம்பிக்கையில்  ..............
என்றும் அன்புடன் ...............
மாநிலச் செயலர்.