Thursday, May 31, 2012

A MAN FIT FOR THE JOB AND THE JOB FIT FOR THE MAN- THY NAME IS GREAT KVS


பூவிதழின் மென்மை யினும்  
மென்மையான  அன்பு உள்ளம் !
அரவணைக்கும் அன்னை உள்ளம் !
எம் தலைவன் உள்ளம் !

விழி மலர்கள் வேலாகும் வாளாகும் !
தீங்கொன்று  சங்கத்திற்கு வந்திட்டால் !
கால் மலர்கள் வாடிடினும்
அவர் கடும் பயணம் நிற்காது !

கை மலர்கள் பிணைத்து நிற்கும்
தம்பியரை சங்கத்தை !
அம்மலரே எதிரிகளை
மன்னித்து  நெற்கதிர் போல்
தலை நாணச் செய்துவிடும் !

பேரறிஞர் அண்ணாவுக்கு
அவர் தம்பி எழுதியது போல
அறிவு ஜீவி KVS க்கு 
அவர் தம்பிமார்  எழுதியது இது !


மூன்றெழுத்தில்  ஒரு சிறப்புண்டு !
அதில் முத்தமிழ் மண முண்டு !
மூவேந்தர் முக் கொடி  முக்கனி என
மும்முரசு ஆர்த்தவர் தமிழர் !

அவர் வாழ்ந்த தமிழ் வாழ்வுக்கு  மூன்றெழுத்து !
அந்த வாழ்வுக்கு அடிப்படையாம்
அன்புக்கு மூன்றெழுத்து !
அன்புக்கு துணை நிற்கும்
அறிவுக்கு மூன்றெழுத்து !

அறிவார்ந்தோர்  இடையில் எழும்
காதலுக்கு மூன்றெழுத்து !
காதலர் போற்றுகின்ற  கடும்
வீரமோ மூன்றெழுத்து !

வீரம் மிக்கோர் காணுகின்ற
களம்  மூன்றெழுத்து !
களம் சென்று காணுகின்ற
வெற்றி மூன்றெழுத்து !

அந்த வெற்றிக்கு நமைஎல்லாம்
இட்டுச் செல்லும்  
அறிவு ஜீவி எம் தலைவன்
KVS   மூன்றெழுத்து !

 
வெறும் உச்சியில் 
இருப்பதல்ல  தலைமைப் பண்பு !
சங்கத்தின் ரத்த நாளங்களோடு   
பின்னிப் பிணைந்ததே உந்தன்   
தலைமைப் பண்பு !

 
அரசுப்   பணி நிறைவுற்றால்  என்ன ?
அடுத்த  பணி உனக்கிருக்கு !
அடுத்த  தலைமுறை  வளர்ப்பாய் நீ !
சங்க வேராக  இருப்பாய்  நீ !


நீவிர்  வாழ்க  பல்லாண்டு!  வளர்க நாளும் உம் தொண்டு !