Wednesday, June 6, 2012

FAMILY PENSION IS ELIGIBLE TO THOSE WHO COVERED UNDER NPS AND DIED AFTER 1.1.2004

                                                     ஒரு முக்கிய செய்தி

அன்புத் தோழர்களே ! வணக்கம்.  1.1.2004 க்குப் பின்னர் பணியில் அமர்ந்து , அதற்குப் பிறகு  பணியில் இறந்து போன ஊழியரின் மனைவி/ வாரிசு  பலர்
இன்னமும் FAMILY PENSION பெறவில்லை என்று  மாநிலச் சங்கத்திற்கு
தொலைபேசி மூலம்  தகவல்  வந்துள்ளது .

புதிய பென்ஷன் திட்டம்  இன்னமும் ஒப்புதல் பெறவில்லை என்பதால் அதற்கான தெளிவான உத்திரவு எதுவும் இல்லை  என்று மறுக்கப் படுவதாக தெரிய வருகிறது . ஆனால் அப்படி மறுக்கப் பட்டால்  அது தவறு .

அதுபோல  உங்கள் கோட்டத்தில் ஏதும்  பிரச்சினை  இருப்பின் உடன்  உரிய விபரங்களோடு மாநிலச் சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கவும் .   பாதிக்கப் பட்டநபரை  உடன் CPMG,TN  அவர்களுக்கு விண்ணப்பிக்கச் சொல்லி  அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பவும் . நிச்சயம் அவர்களுக்கு FAMILY PENSION  பெற்றுத் தர மாநிலச் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் !

வாழ்த்துக்களுடன் ...
மாநிலச் செயலர்.