Monday, September 24, 2012

************************************
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில் 
 கண் முன்னே தோன்றுவது சாத்தியமே !

காத்திருந்து  கள்வருக்கு  கை விலங்கு பூட்டிவிடும்  
கண்ணுக்கு தோன்றாத சத்தியமே !

போடும் பொய்த்திரையை  கிழித்துவிடும் காலம் !
தெரியும் அப்போது மெய்யான கோலம் !
************************************

செய்தி !

சென்னை உயர் நீதிமன்ற குற்றப் பிரிவு  அசல் வழக்கு எண் 21375/2012 மற்றும் M.P. எண் 1/2012 ன்  படி  சேலம் அஞ்சல்  கண்காணிப்பாளர் திருவாளர் . A. சுந்தரராஜன் அவர்கள் ஒரு ' ACCUSED' என்றுபோடப்பட்டுள்ளது ! (பார்க்க உயர் நீதிமன்ற ஆணை முதல் பக்கம்.)

அவர்  மதிப்புக்குரிய சேலம் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் II  அவர்கள் முன்னிலையில் இரண்டு நபர் ஜாமீனுடன் ரூ. 10000/- ரொக்க ஜாமீனும்  அளித்து 'பெயில்' பெற்றுக் கொள்ள வேண்டியது( பார்க்க உயர் நீதி மன்ற ஆணை இரண்டாவது பக்கம் )

மேலும்  அவர் மொத்தம் நான்கு வாரங்களுக்கு  தினமும் காலை  10.00 மணிக்கு சேலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில்  ஆஜராகி கையெழுத்து இடவேண்டும். ( பார்க்க உயர் நீதி மன்ற ஆணை இரண்டாவது பக்கம் )