Monday, September 3, 2012

கடலூர் அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு

கடலூர் அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் 41 ஆவது கோட்ட மாநாடு கடந்த 26.08.2012 அன்று  கடலூர் பாடலீஸ்வரர்  பள்ளி மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது .  கோட்ட மாநாட்டில்  மாநிலச் செயலர்  தோழர். JR  மற்றும் மண்டலச் செயலர் தோழர் மனோகரன் ஆகியோர்  கலந்து கொண்டனர். 

மாநாட்டில் நிர்வாகிகள் தேர்தல்  மும்முனைப் போட்டியாக நடைபெற்றது .நடைபெற்ற தேர்தலில் கீழ்கண்ட நிர்வாகிகள்  போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 

தலைவர் : தோழர். T. ராதாகிருஷ்ணன் , APM,  சிதம்பரம் HO.

கோட்டச் செயலர் : தோழர். P. ரவி, P.A.,  அண்ணாமலை நகர் S.O.

நிதிச் செயலர் :  தோழர். R. ஜெயகுமார் , LRPA, கடலூர் O.T. S.O.

 வெற்றி பெற்ற தோழர்களின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின்  மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .