Thursday, September 27, 2012

தோழர். ஜெயக்குமார் தற்கொலைக்கு PTC கொடுமைகளே காரணம் என்பதற்கு PTC, DIRECTOR ன் எழுத்து பூர்வமான கடிதமே ஆதாரம் !

'சிரமதானம்' என்ற பெயரில் , மண் வெட்டுதல், புல்  பிடுங்குதல், களை  வெட்டுதல் , தோட்ட வேலை செய்யச் சொல்லுதல், கழிப்பறை கழுவச் சொல்லுதல்  என்ற கொடுமைகளா ?

இதற்கு மகாத்மா காந்தியடிகளை உதாரணம் காட்டுவதா ? 

தானே மனமுவந்து செய்வது  மனித நேயமிக்க சேவை !
அடுத்தவரை துன்புறுத்தி செய்யச் சொல்லுதல்  மனிதாபிமானமற்ற செயல் அல்லவா ?

அதுவும்  மருத்துவ சான்றிதழ் அளித்த பின்னும் விலக்களிக்காமல் அதில் ஏதாவது ஓட்டை இருக்குமா என்று  தேடித் பிடித்து  மேலும் துன்புறுத்துதல் என்ன  குணம் ?

அதற்கு தண்டனையும்  வழங்கச் சொல்லுதல் கொடூர எண்ணம் அல்லவா ?

மகாத்மா காந்தியடிகள்  கழிப்பறை கழுவியது சரியென்றால் அது எல்லோருக்கும்  பொருந்தும் தானே ?

அப்படியானால்  குமாரி. நிர்மலாதேவி அவர்கள்  தன்  கூற்றுக்கு முன்னுதராணமாக  தானே முன்  நின்று PTC  கழிவறைகளை தினம்  
கழுவுவாரா ? 

அடுத்தவருக்கு உதாரணமாகவும் சேவை மனப்பான்மையை வளர்ப்பதற்கும்  இது சிறந்த வழியாக  இருக்குமல்லவா ?

அப்படி செய்யாமல் அவர்  ' dignity'  பார்ப்பரானால்  அவரது கூற்றுப் படி அதுவும் தவறுதானே ?

உங்கள் சிந்தனைக்கே  விடுகிறோம் !