Monday, April 23, 2012

PAPANASAM BRANCH CONFERENCE

நமது அஞ்சல் மூன்று சங்கத்தின் பாபநாசம் கிளையின் 16 ஆவது மாநாடு
கடந்த 22.04.2012  ஞாயிறு அன்று பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. காலை 10.30  மணிக்கு
கொடியேற்று நிகழ்ச்சியுடன் துவங்கிய மாநாடு , கிளைத் தலைவர் தோழர். V.  ஸ்ரீராம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி நடைபெற்று கீழ்க்
கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

கிளைத் தலைவர் : தோழர்.  V. ஸ்ரீராம்
கிளைச் செயலர்     : தோழர். J.  குணசீலன்
நிதிச் செயலர்          : தோழர். B. குமார்

மாநாட்டு நிகழ்வுகளில் மாநிலச் செயலர் தோழர். J.R. கலந்து
கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

 மேலும் குடந்தை கோட்டச் செயலர் தோழர். பெருமாள், மன்னை கிளைச் செயலரும் தஞ்சை கோட்ட செயலரும் ஆகிய தோழர். காந்தி, மன்னை கிளைத் தலைவர் தோழர். சீலன் ராஜ், தஞ்சை கோட்ட முன்னாள் செயலர் தோழர். T. குமரேசன், தஞ்சை கோட்ட சங்க முன்னோடி  தோழர்.R.  செல்வ குமார், பாபநாசம் முன்னாள் கிளைத் தலைவர் தோழர். சௌந்தரராஜன் , மற்றும்  P4, GDS   நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி னார்கள்.

புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாநிலச் சங்கத்தின் மனம் நிறைந்த
வாழ்த்துக்கள்.