Monday, July 2, 2012

ARE THE EYES OF THE REGIONAL/CIRCLE ADMINISTRATION SHUTTING DOWN?

அதிர்ச்சியூட்டும் ஆவணம் ! 
 சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளரின்  ஊழல் பாரீர் !

 LODGE இல் தங்கியதற்கான அறை  வாடகை (ROOM RENT) அளித்ததாக  அவர் அளித்த போலி ரசீது  கீழே பார்க்கலாம் ! 

வெறும் லெட்டர் ஹெட்டில்  அவர் தயாரித்த போலி ரசீது இது!

ஒருநாள் அறை  வாடகை எவ்வளவு என்று  குறிப்பிடப் படவில்லை . மாத வாடகையும் இல்லை . அந்த  LODGE  தின வாடகைக்கு விடப் படுவதாகும். இந்த ரசீதில் , உரிய ரசீது எண்  இல்லை.  உரிய REVENUE STAMP  இல்லை . இதனுடைய CARBON COPY  LODGE இல் இல்லவே இல்லை . இந்த ஆவணமும் இது போன்ற பல ஊழல் ஆவணமும்  மண்டல / மாநில அதிகாரிகளுக்கு அனுப்பி  நான்கு மாதங்கள் ஆகின்றன .  எந்த வித  நடவடிக்கையும இல்லவே இல்லை.

இது போல நம் ஊழியர் எவரேனும் செய்திருந்தால்  உடனே  SUSPENSION  உத்திரவு தான் !  உடன் RULE 14 
CHARGE SHEET  தான் !   

பெரியவா ......  பண்ணினா  தப்பே இல்லை ! .....
இன்னும்  பண்ணுங்கோ !


அதே LODGE இல் வழங்கப் படும்  உரிய வரிசை எண் உள்ள உண்மை ரசீதின் XEROX  நகல் கீழே பார்க்கலாம் !
இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் !

என்ன ? இது போல  ....  இன்னும் பல இருக்கு ........  தினம் தினம்  ஊழல் ......  SORRY ......   உண்மைகள் வெளியாகும் ! .....

இதைப் பார்க்கும் அனைத்து தோழர்களும் , கோட்ட/ கிளைச் செயலர்களும்  உங்கள் பகுதியில் உள்ள அனைத்து தோழர்களையும் .... அனைத்து அதிகாரிகளையும்  தயவு செய்து இந்த வலைத்தளத்தை  கண்டிப்பாக பார்க்கச் சொல்லுங்கள் !

நீங்கள்தான் ரிப்போர்ட்டர் !


இதைப் பார்த்த பிறகாவது  மண்டல/ மாநில நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா ?  அல்லது இன்னும் ஊழலை வெளிப்படுத்தட்டுமே  என்று மெளனமாக இருக்குமா ?

ஊழல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?
அவர்  உடன் NON OPERATIVE POST க்கு மாற்றப் படுவாரா ?
அல்லது இங்கேயே இருந்துகொண்டு இது போல பல ஊழல் செய்யட்டும் என்று  பச்சைக் கொடி  காட்டுவார்களா ?

பதிலை  எதிர்பார்க்கிறோம் ................