Thursday, January 27, 2011

மேட்டுப்பாளையம் மற்றும் அம்பத்தூர் கிளை மாநாடுகள்

கடந்த 26 .1 .2011 அன்று நமது அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் மேட்டுப்பாளையம்  கிளை மாநாடு  நடைபெற்றது.  மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக   NFPE  சம்மேளன செயல் தலைவர் தோழர். சந்திரசேகர் அவர்களும் அகில  இந்திய சங்கத்தின்
உதவி பொதுச் செயலர் தோழர் வீரமணி அவர்களும் கலந்து கொண்டு  சிறப்பித்தார்கள்

மாநாட்டை  அகில இந்திய செயற்குழுவின்  முடிவுக்கு இணங்க  திருப்பூர் கோட்டத்தின் செயலரும் மாநில உதவிச் செயலருமான தோழர்
N . சுப்ரமணியன் அவர்கள் நடத்தினார் . மாநாடு முறையாக கூட்டப்பட்டு எந்தவித
சிக்கலும் இன்றி உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்போடு  ஒருமனதாக
நடைபெற்றது  சிறப்பு அம்சமாகும்.  பிரச்சினையை உண்டாக்கி சங்கத்தினை முடக்குவதால் ஏற்படும் பாதிப்புகளால் வெறுப்படைந்திருந்த ஊழியர்களுக்கு மாநாட்டு அறிவிப்பு  மிகுந்த  மகிழ்ச்சியை அளித்திருந்தது .

அனைத்து ஊழியரும் CWC இன் முடிவைப் பாராட்டி புதிய தேர்தலை  மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டதால் - பிரிவினை வாதிகளின்  சதித்திட்டங்கள்  செல்லுபடியாகவில்லை .  நிர்வாகிகள் தேர்தல் ஊழியர் ஒற்றுமையுடன் ஏகமனதாக நடைபெற்றது .  இது  எதிர்காலத்தில் தனி நபர் துதி பாடி சங்கத்தை உடைப்பவர்களுக்கு  ஒரு பாடமாக அமைந்தது.

ஒற்றுமையே  NFPE இயக்கத்தின் வலிமை  என்பதை உணர்த்திய மேட்டுப்பாளையம் கிளைச் சங்க உறுப்பினர்களுக்கு மாநிலச் சங்கத்தின்
பாராட்டுக்கள் !  வாழ்த்துக்கள் ! கிளைச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக கீழ்க் கண்ட தோழர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

தலைவர் :  தோழர் . N .M .  மாணிக்கம்  OFFG. POSTMASTER, METTUPPALAYAM HO.
செயலர் :     தோழர். செல்வராஜ் II , P.A., KARAMADAI S.O.
பொருளர் :  தோழர். கே. வேணுகோபாலன்,  CRM, METTUPPALAYAM HO.

புதிய நிர்வாகிகளை  மாநிலச் சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது !

எழுச்சி மிகு அம்பத்தூர் கிளை மாநாடு

நமது பொதுச் செயலர் அறிவு ஜீவி  KVS  அவர்களின் தாய்க் கிளையான
அம்பத்தூர் கிளையின்  மாநாடு கடந்த 26 .1 .2011 அன்று வெகு சிறப்பாக
நடைபெற்றது . மாநாட்டில் கிளையின் முன்னாள் நிர்வாகிகளும் வழிகாட்டும்
தலைவர்களுமான தோழர் G.C.N. . மற்றும் தோழர் முருகன் ஆகியோர்
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டார்கள்.
மாநாட்டில் கீழ்க் கண்ட  நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் !

தலைவர் :  தோழர். L . அண்ணாமலை ,  POSTMASTER, AMBATTUR HO
செயலர் :    தோழர்  K . ஜெயசீலன் , SUPERVISOR(D), AMBATTUR HO.
பொருளர் :  தோழர். J .D . மணி ,   SPM, KALADIPETTAI SO.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு  மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.!

.........J .R . ,  மாநிலச் செயலர்