Saturday, February 28, 2015

COM. K. PACHIYAPPAN, EX- CIRCLE ORG. SECRETARY RETIRING FROM SERVICE !

அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முன்னாள் அமைப்புச் செயலரும் பவானி அஞ்சல் மூன்று கிளையின் 
முன்னாள்  செயலர், தலைவரும் ஆகிய அன்புக்குரிய  
தோழர். S . பச்சியப்பன் அவர்கள்  
(98944 37337)
இன்று (28.2.2015) இலாக்காவில் இருந்து  41 ஆண்டு கால சேவைக்குப் பின் பணி  நிறைவு பெறுகிறார். அவரது தொழிற் சங்கப் பணி  ஈரோடு கோட்டத்தில் மட்டுமல்லாமல் மாநிலச் சங்கத்திலும்  பரிணமித்தது. மிகச் சிறந்த செயல் வீரர். ஆற்றலாளர். தொழிற் சங்க வாதி . மனித நேயம் மிக்கவர். எல்லாவற்றுக்கும் மேலாக  அனைவருடனும்  அன்பு காட்டி பழகும்  இனிய  நண்பர் . அவர்தம்  இலாக்கா  பணி  நிறைவு நாளில் எல்லா நலனும்  வளமும் பெற்று அவரது குடும்பத்தாருடன்  நீடு  வாழ  நம்  மாநிலச் சங்கம் நெஞ்சார வாழ்த்துகிறது !


27.02.2015 REGIONAL LEVEL DHARNA ON PJCA / CIRCLE UNIONS' CALL A GRAND SUCCESS

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம். நேற்று (27.02.2015)  அஞ்சல்  மத்திய JCA  மற்றும் அஞ்சல் மூன்று ,  GDS  மாநிலச் சங்கங்களின் அழைப்பை ஏற்று மண்டல அலுவலகங்கள் முன்பாக  அறிவிக்கப்பட்ட  போராட்டம் பெரும் வெற்றி பெற்றது.  

சென்னையில் CPMG  அலுவலக வளாகத்தில்  இந்த நிகழ்வு முழு நாள் போராட்டமாக மிகச் சிறப்பாக நடைபெற்றது .மேலும் தென் மண்டல அதிகாரியின் தொழிற்சங்க விரோத நடவடிக்கையை எதிர்த்து கண்டனப் போராட்டமாகவும்  நடத்தப் பட்டது. தார்ணா  போராட்டத்திற்கு  GDS  மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் அவர்கள் தலைமை வகித்து சிறப்பாக நடத்தினார். தார்ணா  போராட்டத்தை   அஞ்சல் RMS  ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். K . ராகவேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். NFPE  இணைப்புக் குழு தலைவரும் R  4 மாநிலச் செயலருமான தோழர்.  B . பரந்தாமன் , NFPE  உதவிப் பொதுச் செயலர் தோழர்.S . ரகுபதி, செயல் தலைவர் தோழர். A .மனோகரன், அஞ்சல் மூன்று அகில இந்திய செயல் தலைவர் தோழர் N . கோபாலகிருஷ்ணன் , உதவிப் பொதுச் செயலர் தோழர். A . வீரமணி, அஞ்சல் மூன்று மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் , நிர்வாகப் பிரிவு மாநிலச் செயலர் தோழர். நாகராஜன்,  அஞ்சல் RMS  ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். M . கண்ணையன்  உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். K.V.S. அவர்கள்  தார்ணா  போராட்டத்தை முடித்து வைத்து  சிறப்புரை ஆற்றினார்.  தார்ணா  ஏற்பாடுகளை  அஞ்சல் மூன்றி மாநிலச் செயலர் தோழர். J . ராமமூர்த்தி  சிறப்பாகச் செய்திருந்தார். சென்னை பெருநகர மண்டலத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  செயலர்கள்/ நிர்வாகிகள் , தோழர்/ தோழியர்  பெருமளவில் முழு நேரம்  கலந்துகொண்டு  சிறப்பித்தனர்.

இதுபோல மத்திய மண்டலத்தின் திருச்சியில் PMG அலுவலக வளாகத்தில்  முழு நாள் தார்ணா போராட்டம்  சிறப்பாக நடத்தப்பட்டது . அஞ்சல் மூன்றின் மத்திய மண்டலச்  செயலர் தோழர். R . குமார் அவர்கள் இந்த  தார்ணா போராட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.  , மாநில உதவித் தலைவர் தோழர் J . ஜானகிராமன் , மாநில உதவி நிதிச் செயலர் தோழர்               R . பெருமாள் , GDS  மாநில நிதிச் செயலர் தோழர். R . விஷ்ணுதேவன், GDS  மாநில உதவித் தலைவர் தோழர். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.  மண்டலத்தின் பல்வேறு கோட்டங்களில் இருந்து தோழர்கள்  பெருமளவில் கலந்துகொண்டு  தார்ணா போராட்டத்தை சிறப்பித்தனர்.


மேற்கு மண்டலத்தில் இந்த போராட்டம்   கோவை  NFPE அஞ்சல் RMS  MMS, GDS  சங்கங்களின் சார்பில்  மாலை நேர ஆர்பாட்டமாக  இரவு 08.15 மணி வரை  R .S . புர ம்  மண்டல அலுவலக வாயிலில்  சிறப்பாக நடைபெற்றது . மண்டலம் முழுவதிலிருந்தும் சுமார் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் / தோழியர்கள்  இதில் கலந்துகொண்டனர்.  ஆர்ப்பாட்டக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை  அஞ்சல் மூன்று மாநில உதவித்தலைவர் தோழர். எபினேசர் காந்தி சிறப்பாக செய்திருந்தார். அஞ்சல் மூன்று மண்டலச் செயலர்  தோழர். C. சஞ்சீவி , மாநில அமைப்புச் செயலர் தோழர். A . ராஜேந்திரன் , GDS  மாநில உதவிச் செயலர் தோழர்.  மகாலிங்கம்  உள்ளிட்ட மாநிலச் சங்க நிர்வாகிகள் போராட்டத்தை விளக்கிப் பேசினார் .


தென் மண்டலத்தில்  மண்டல அதிகாரி  தர்ணா  மற்றும் விடுப்பு மறுப்பு செய்து உத்திரவிட்டிருந்ததால்  அங்கு போராட்டம்  நடைபெறவில்லை .


மூன்று மண்டலங்களிலும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு  சிறப்பித்த அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகள், கோட்ட/ கிளைச் செயலர்கள் மற்றும் தோழர்/ தோழியர்களுக்கு  தமிழ் மாநில அஞ்சல் மூன்று மற்றும் GDS  சங்கங்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

சென்னையில் நடைபெற்ற தார்ணா  போராட்டத்தில் பேசும்  போது நமது NFPE  உதவி மாபொதுச்  செயலர் தோழர். S .  ரகுபதி அவர்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் உடனே வழங்க வேண்டாம் என்றும் மற்றைய சங்கங்களையும் கலந்துகொண்டு  ஒரு கூட்டுப் போராட்டமாக, வலுவாக இதனைச் செய்திட வேண்டும் என்றும்  வேண்டுகோள் (APPEAL )  விடுத்தார். இதனை சம்மேளனம் சார்பாகவே தாம் செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் பல மூத்த தலைவர்கள் மற்றும்  நிர்வாகிகள்  இந்த வேண்டுகோளை தொடர்ந்து வைத்தனர். எனவே அனைவரின் கருத்தை ஏற்று வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவதை  சற்று தள்ளி வைப்பதெனவும்    கூட்டுப் போராட்டமாக  மாற்றுவதற்கு எதிர்வரும் 2.3.2015 சென்னையில் நடைபெற  உள்ள தார்ணா போராட்டத்திற்குப் பின்னர் NFPE  இன் அனைத்து சங்கங்களையும் மீண்டும் ஒருமுறை கலந்து முடிவெப்பதென்றும்  தார்ணா  போராட்டத்தின்  முடிவில்  மாநிலச் சங்கங்களின் சார்பாக  கூட்டாக அறிவிப்பு செய்யப்பட்டது. 

நிகழ்வுகளின் புகைப்படங்கள்  மண்டலச் செயலர்களிடமிருந்து வந்து சேராததால்  அவற்றை உடன் பிரசுரிக்க இயலவில்லை . புகைப்படங்கள் கிடைத்தவுடன்   அடுத்த வாரத்தில் பிரசுரிக்கப் படும் .

தலைவர்களின் வழி காட்டுதல்களை ஏற்போம் !
கூட்டுப் போராட்டத்திற்கு உடன் முயற்சி மேற்கொள்வோம் ! 
கூட்டு பேர  சக்தியை மேலும் வலுப்படுத்துவோம் !  
போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !

COM S.K. VYAS MEMORIAL MEETING BY TN CONFEDERATION ON 26.2.2015 AT AG'S OFFICE PREMISES, CHENNAI

தோழர் S. K. வியாஸ் படத்திறப்பு விழா 
மற்றும் அஞ்சலி கூட்டம்.


கடந்த 26.2.2015 அன்று  மாலை சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலக வளாகத்தில் மறைந்த தலைவர் தோழர். S.K. வியாஸ் அவர்களின் படத்திறப்பு நிகழ்வும் மற்றும் அஞ்சலி கூட்டமும்  மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம், தமிழ்நாடு  மற்றும் அஞ்சல், தொலைபேசி, ரயில்வே, பாதுகாப்பு மற்றும் அஞ்சல், தொலைபேசி ஓய்வூதியர் சங்கங்கள் இணைந்து நடத்தினர். கூட்டத்தை மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தலைவர் தோழர். J. ராமமூர்த்தி தலைமை தாங்கி நடத்தினார். முதலாவதாக சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர். தோழர். C.A. ராஜா ஸ்ரீதர் மறைந்த தலைவரின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து பாதுகாப்பு ஊழியர் சம்மேளன தலைவர். N .J . ராமன் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழக பொதுச் செயலாளர் தோழர். M. துரைபாண்டியன், அஞ்சல் மற்றும் ஆர். எம். எஸ். ஓய்வூதியர் அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர். K. ராகவேந்திரன், BSNL ஓய்வூதியர் சங்கங்களின் தலைவர்கள் தோழர். D. கோபாலகிருஷ்ணன், தோழர். C.K. நரசிம்மன், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழக முன்னாள்  தலைவர். தோழர். A.G. பசுபதி, அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் அமைப்பின் மாநில தலைவர். தோழர். M. கண்ணையன், கல்பாக்கம் அணுமின் கழக சங்க தலைவர் தோழர். தனஞ்சயன், AG அலுவலக ஊழியர் சங்கத்தை சேர்ந்த தோழர். பஷீர் அகமது , NFPE  அஞ்சல் மூன்று மகிளா   கமிட்டி  மாநிலத் தலைவர்  தோழர். ஏஞ்சல் சத்தியநாதன் அவர்களும் அஞ்சலி நினைவஞ்சலி செலுத்தினர் . இறுதியாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொருளாளர் தோழர். சுந்தரமூர்த்தி நன்றி உரை ஆற்றினார். மறைந்த தலைவருக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் பெருமளவில் ஓய்வூதியர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

















Thursday, February 26, 2015

REPRESSIVE MEASURES BY PMG, SR AGAINST PJCA DHARNA AND CIRCLE UNIONS CALL

தென் மண்டல நிர்வாகத்தின் அடக்குமுறையை  கண்டிக்கிறோம்  !
அடக்கு முறைக்கு அஞ்சிடோம் ! ஆணவத்திற்கு அடிபணியோம் !
புறப்படுவோம் வேலை நிறுத்த களம் நோக்கி !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! நாளை (27.02.2015) அன்று மண்டல அலுவலகங்கள் முன்பாக நடத்தப்பட அறிவிக்கப்பட்ட PJCA  மற்றும்  தமிழ் மாநில அஞ்சல் மூன்று /GDS  சங்கங்களின்  தார்ணா  போராட்டத்திற்கு முதலில் அனுமதி வழங்குவதாக   இருமாதங்களுக் கான பேட்டியின் போது நம்முடைய மாநிலச் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்த   மதுரை மண்டல PMG அவர்கள்   மறுநாள்  எந்தக் கோட்டத் திலும் விடுப்பு வழங்கிடக் கூடாது என்று  தனது முடிவை மாற்றி அறிவித்தார். 

மேலும் மாலை  மண்டல அலுவலக வளாகத்தில்  தார்ணா  போராட்டம் நடத்திட அனுமதி மறுத்து நமது அஞ்சல் மூன்று மண்டலச் செயலருக்கு  EMAIL  செய்தி அனுப்பியுள்ளதாக  நம்முடைய மாநில உதவிச் செயலர் தெரிவித்தார் . எனவே  இது குறித்து  தென் மண்டலச் செயலர், மாநிலச் செயலர் மற்றும் மாநிலத் தலைவர்  முறையே /தொலைபேசியில்  தென்மண்டல PMG அவர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு கேட்டபோது அவரது நிலையில் இருந்து இறங்கி வர மறுத்து விட்டார்.  உடன்  CPMG  ADDL  CHARGE  அவர்களை (கர்நாடகா  மாநிலம்) பெங்களூருவில்  தொலை பேசியில் தொடர்பு கொள்ள மாநிலச் செயலர் முயன்றபோது , அவர் அங்கில்லை என்றும் கேரளா மாநிலத்திற்கும் ADDL  CHARGE  என்பதால் அங்கு சென்றுள்ளார் என்றும்  மாலை  05.00 மணிக்கு  திரும்பலாம் என்றும் தெரிவித்தார்.  எனவே  மாலை 05.30 மணியளவில் மீண்டும் தொடர்பு கொண்டபோது அதுவரை அவர் வரவில்லை என்றும் விமானம் காலதாமத மாக வருகிறது என்றும் தெரிவித்தார்கள் . மாலை 06.30 வரை   அவர் வந்து சேரவில்லை என்று தெரிவித்தார்கள்.  

எனவே  நாளை (27.02.2015) அன்று    தென் மண்டலத்தில் , மண்டல அலுவலகம் முன்பாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட  தார்ணா  போராட்டம் ரத்து செய்யப்படுவதாக   தென் மண்டலத்தை சேர்ந்த மாநிலச் சங்க நிர்வாகிகளால் அறிவிப்பு செய்யப்பட்டது.  

அனுமதி மறுத்ததால் வாய் மூடி மௌனியாக இருக்க மாட்டோம் !

எனவே தென் மண்டல PMG அவர்களின் அடக்கு முறையைக்  கண்டித்தும் தொழிற் சங்க பழி வாங்கும் போக்கை கண்டித்தும் PJCA / மாநிலச் சங்கங்களின் போராட்ட அறிவிப்பை ஆர்ப்பாட்டமாக மாற்றி  தென் மண்டலத்தில் அனைத்து கோட்ட/ கிளைகளிலும்  27.02.2015 மாலை  கண்டன ஆர்ப்பாட்டமாக   நடத்திடக் கேட்டுக் கொள்கிறோம்.   NFPE  யின்  இதர சங்கங்களும்  இதற்கு அதரவு தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.

இந்த அடக்குமுறையை  நம்  மாநிலச் சங்கம்  நிச்சயம் அனுமதிக்காது.  CPMG  அலுவலக வாயிலில் நாளை (27.02.2015) அன்று  நடைபெற P 3 மற்றும் GDS  சங்கங்களால்  அறிவிக்கப் பட்டுள்ள  தார்ணா  போராட்டம்  கண்டனப் போராட்டமாக  நடைபெறும்  என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

இதே போல  இதர மண்டலங்களிலும்  நம்முடைய  தார்ணா போராட்டம் அஞ்சல் மூன்று  மற்றும் GDS  சங்கங்களால்  கண்டனப் போராட்டமாக நடத்திட மாநிலச் சங்கம்  அறிவிக்கிறது. NFPE  யின்  இதர சங்கங்களும்  இதற்கு  ஆதரவு தருமாறு  வேண்டுகிறோம்.

 மாலையில்  PMG SR  அவர்களின் தொழிற் சங்க விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், தென் மண்டலத்தில் நடைபெற்றுள்ள ஜனநாயகப் படுகொலையைக்  கண்டித்தும் இதர கோரிக்கை களுடன்  வேலை நிறுத்த நோட்டீஸ்  மாநில நிர்வாகத்திற்கு  வழங்கப்படும். வேலை நிறுத்தத் திற்கான  தயாரிப்பு  வேலைகள் 02.03.2015 PJCA  தார்ணாவுக்குப் பிறகு அறிவிக்கப்படும்.  இதர போராட்ட வியூகங்கள்  குறித்து  27.02.2015 மாலை வேலை நிறுத்த நோட்டீஸ்  வழங்கப் பட்டபின்னர்  அண்ணா சாலை  தலைமை அஞ்சலகத்தில்  தலைமையகத்தில்  உள்ள  மாநிலச் சங்க நிர்வாகிகள் , அகில இந்திய சங்க நிர்வாகிகள்  மற்றும்  தலைவர்கள்  கூடி  முடிவு செய்யப்படும். 

"தாக்குண்டால் புழு கூட

தரை விட்டு தீ துள்ளும்

கழுகு தூக்கினும் குஞ்சுக்காக

துடித்து எழும் கோழி

சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது

முயல் கூட திருப்பித்தாக்கும்

சாக்கடை புழுக்களல்ல நாங்கள்

சரித்திரத்தின் சக்கரங்கள்" 

அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது - எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. 

கிளர்ந்தெழுங்கள்,உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி

பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையேநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை இது!

அடக்குமுறை வென்றதாக வரலாறு உலகில் இல்லை ! 
ஆணவங்கள் வென்றதாக வரலாறு  இல்லவே இல்லை ! 
உழைக்கும் சக்தியின் முன்னே , 
அவர்களின் உரிமைக் குரல்களின் முன்னே  
சமஸ்தானங்கள் சரிந்ததாகவே  வரலாறு !  
கிளர்ந்தெழுவோம் ! அடிமை விலங்கொடிப்போம் ! 
புதிய வரலாறு  படைப்போம் !

PERMISSION GRANTED BY PMG, SR FOR CONDUCTING DHARNA AT R.O. PREMISES

அன்புத் தோழர்களுக்கு , வணக்கம் ! இன்று  இரு மாதங்களுக்கு ஒரு முறையான மதுரை மண்டல PMG அவர்களுடனான பேட்டி    நடைபெற்றது. நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் மண்டலச் செயலர் தோழர். தியாகராஜபாண்டியன் அவர்களும்  மாநில உதவிச் செயலர் தோழர். ஜேக்கப்ராஜ் அவர்களும்  கலந்துகொண்டார்கள்.  பேட்டியின் போது  நம்முடைய  மாநிலச் செயலர்  அளித்த கடித நகலை  PMG அவர்களிடம்  அளித்து முழு நாள்  தார்ணா  போராட்டத்தை  மண்டல அலுவலக வளாகத்தில் நடத்திடவும் , கோட்டங்களில்   தோழர்களுக்கு  விடுப்பு அளிக்க வேண்டியும்  பேசினர் . 

அதன் முடிவாக  உரிய விடுப்பு  கோட்டங்களில் அளிக்க அனுமதிப்பதாகவும்  மண்டல அலுவலக வளாகத்தில் தார்ணா  நடத்திட அனுமதிப்பதாகவும் PMG, SR  அவர்கள்  தெரிவித்துள்ளார்கள். இந்த செய்தியை  உடன் நம் வலைத்தளத்தில்  பிரசுரிக்குமாறு  நம்முடைய தென்  மண்டலச் செயலரும், மாநில  உதவிச் செயலரும்  கை பேசி மூலம் மாலை 05.30 மணியளவில்  மாநிலச் செயலரிடம் தெரிவித்தார்கள்.  எனவே தென் மண்டலத்தில் நம்முடைய முழுநாள் தார்ணா  
போராட்டத்தில்  தோழர்கள்  முழுமையாக கலந்துகொண்டு  போராட்டம்  சிறக்கச் செய்திட வேண்டுகிறோம்.

SUCCESS TO CIRCLE UNION EFFORTS IN CANCELLING HOLIDAY DELIVERY DUTY

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !  நம்முடைய  மாநிலச் சங்கத்தின் மூலம்  ஞாயிறு  மற்றும் விடுமுறை தினங்களில்  தபால் / துரித அஞ்சல் பட்டுவாடா  மதுரை மற்றும்  சென்னை பெருநகர மண்டலத்தில்  நான்கு அலுவலகங்களில் உத்திரவிடப்பட்டிருந்ததை ரத்து செய்திட PMG, SR , PMG, CCR, CPMG , TN  ஆகியோர்களிடம் பலமுறை  பிரச்சினை எழுப்பி கடிதம் அளித்து, இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியில் வைத்துப் பேசியும்  தீராமல்  நம்முடைய பொதுச் செயலர் மூலம்  JCM DEPARTMENTAL COUNCIL  கூட்டத்தில் வைத்து பேசிட கோரியிருந்தோம். கடந்த 16.12.2014 அன்று  நடைபெற்ற JCM  DC  கூட்டத்தின் இது குறித்து நம்முடைய பொதுச் செயலர் பிரச்சினையை  எடுத்துச் சென்று  பேசி அதற்கு  உடன்  நடவடிக்கை எடுப்பதாக பதிலும் பெற்றார். 

இருப்பினும் பிரச்சினை தீராததால் நம்முடைய  கோட்ட /கிளைச் செயலர்கள் கூட்டத்தின்  முடிவாக  அறிவிக்கப்பட்ட தமிழகம் தழுவிய மூன்று  கட்ட போராட்டத்தின்  ஒரு பிரச்சினையாக  இது எழுப்பபட்டு  நம்முடைய போராட்ட  சுற்றறிக்கை எண் . 11 இல்  இரண்டாவது பக்கத்தில்  13 வது கோரிக்கையாக இது அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது சென்னை பெருநகர மண்டலத்தில்  இந்த உத்திரவு ரத்து செய்யப் பட்டுள்ளது.

இது நமது போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த இரண்டாவது வெற்றியாகும். இது குறித்து  தாம்பரம் கோட்டச் செயலர்  தமது வலைத்தளத்தில்  அளித்துள்ள செய்தி கீழே  காணவும். தாம்பரம் கோட்ட அதிகாரியின் உத்தரவு நகலும்  கீழே காணவும். மதுரை மண்டலத்திலும் இந்த உத்தரவை விரைவில் நாம் பெறுவோம். 

போராடாமல் பெற்றதில்லை ! போராடி நாம் தோற்றதில்லை ! 27.02.2015 முழு நாள்  தார்ணா  போராட்டத்தை எந்தவித தொய்வுமில்லாமல் முழுமையாக நடத்திடுமாறு  அந்தந்த மண்டலங்களில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கு அறிவிக்கிறோம். ஆர்ப்பாட்டம் மட்டும் செய்து கொள்ளலாம் என்று எந்த நிர்வாகியோ, கோட்ட/ கிளைச் செயலரோ அலட்சியமாக  இருக்கக்கூடாது என்று  மாநிலச்சங்கம் கேட்டுக் கொள்கிறது. பிரச்சினைகள் தீரவேண்டுமானால்  முழுமையான போராட்டமே  இறுதி வழியாகும்.
=======================================================================
நற் செய்தி.

தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இயங்கி வந்த துரித தபால் பட்டுவாடா சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை இதற்கான உத்திரவு கோட்ட அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது , மிக்க மகிழ்ச்சி. இந்த உத்திரவை பெறுவதற்கு முழு முயற்சி எடுத்து வெற்றி பெற்ற நமது மாநில சங்கத்தின் மாநில செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்களுக்கு தாம்பரம் கோட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். 

                                                                                          இப்படிக்கு 
                                                                                   B .செல்வகுமார் 
                                                                                   கோட்ட செயலர் 
                                                                           தாம்பரம் கோட்ட சங்கம் 
========================================================================
DEPARTMENT OF POSTS
Office of the Senior Superintendent of Post Offices
Tambaram Division, Chennai 600 045
Telephone no : 22266525, 22265041   Fax : 22260550

To                                                                                                     BY HAND/ e mail
The Postmaster,
Tambaram HO
Chennai 600045

       NO/G/ Sunday dely dlgs     /14   dated at Tambaram the                     25.2.15

              Sub: Speed Post Delivery on Sundays/ PO Holidays -reg.

              Ref: R.O letter no ML/81-9/NPW/2014/CCR dated 23.2.15

                 
                    The orders of the competent authority received vide R.O letter cited above, regarding discontinuing the delivery of Speed Post articles on Sundays/ Holidays at Tambaram HO with immediate effect is hereby conveyed.



Senior Superintendent
=================================================

SUCCESS TO CHQ EFFORTS IN GETTING R.S. PURAM HPO CONVERTED INTO PM GR. III OFFICE

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்  கோவை கோட்டத்தில் எந்தவொரு அஞ்சலகமும் PM  GR III STATUS  இல் இல்லை என்றும்  அதனால் R.S.PURAM HPO மற்றும்  COIMBATORE  CENTRAL  S .O . ஆகிய அலுவலகங்களை PM  GR III  STATUS க்கு மாற்றித் தரும்படி  நம்முடைய அகில இந்திய சங்கத்தின் மூலமாக நாம் கேட்டிருந்தோம்.  அதற்கு  இலாக்காவில்  பரிசீலிப்பதாக உறுதி அளித்திருந்தார்கள் . தற்போது நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர் . N .S  அவர்கள்  இந்த பிரச்சினை குறித்து மீண்டும் நினைவூட்டி  இந்தப் பிரச்சினைய எடுத்துச் சென்றுள்ளார். தற்போது  அவருக்கு  கோவை கோட்டத்தில்  R .S . PURAM  தலைமை அஞ்சலகம்   PM  GR III யாக தகுதி மாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளதாக   DTE  இல் தெரிவித்துள்ளார்கள். 

இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டு  தீர்த்து வைத்த  நமது முன்னாள்  அகில இந்திய பொதுச் செயலர்  தோழர். கிருஷ்ணன் மற்றும் இந்நாள் பொதுச் செயலர் தோழர். .N .S   ஆகியோருக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.!  முந்தைய கடிதங்களின் நகல்கள் கீழே உங்கள் பார்வைக்கு :-

                        Ph.: (O) 011-25706040, Fax: 011-25896278
NFPE LOGO.jpgALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’

                        CHQ: Dada Ghosh Bhawan, 2151/1, New Patel Road, New Delhi - 110008

                                                                                                                             
President              : R. Sivannarayana                                                   E-mail     : aipeugrc@gmail.com
General Secretary: M. Krishnan                                                             Website  : http://www.aipeup3chq.com

Ref: P/2-19/Coimbatore                                                                                           Dated – 27.06.2014

To

The Secretary
Department of Posts
Dak Bhawan, New Delhi – 110001

Sir,

Sub: -  Conversion of two HSG-I offices into Postmaster Grade-III offices in Coimbatore division, Tamilnadu Circle – reg.

It is brought to our notice that at Coimbatore division, there are five HSG-I Posts but no Postmaster Grade III posts are available. Twenty Posts of PM Grade I and two posts of PM Grade II are on hand in this division. It is pertinent to mention here that in All India Level and in Regional level, the number of Postmaster Grade II posts and Grade III posts is approximately equal. It is peculiar that no postmaster Grade III posts is in existence at Coimbatore division to accommodate if any appointed or promoted to PM Grade-III.

R. S. Puram HPO and Coimbatore Central SO are in HSG I status may kindly be notified for Postmaster Grade-III officials and the remaining three HSG I posts out of five available HSG-I Posts may be in the same line. This suggestion is not only scientific but also ensures justice both to HSG-I and Postmaster Grade-III.

Coimbatore division is a bigger unit and non availability of Postmaster Grade III posts in this division causing imbalance throughout the region and it is requested to cause action to change the R. S. Puram HO and Coimbatore central SO into Postmaster Grade-III office by making necessary adjustments in other divisions of western region Tamilnadu if need be.

A line in reply in this regard is highly appreciated.

With profound regards,

Yours faithfully,
(M. Krishnan)
General Secretary

Copy to: -
Divisional Secretary, Coimbatore
Circle Secretary, Tamilnadu Circle

Press

S.K. VYAS MEMORIAL MEETING ORGANISED BY TN CONFEDERATION & AIPRPA ON 26.02.2015

மறைந்த  முது பெரும்  தலைவர்  தோழர்  S . K . வியாஸ் அவர்களின் நினவஞ்சலி கூட்டம்  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் தமிழ்நாடு கிளை மற்றும் அகில இந்திய அஞ்சல் RMS  ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக எதிர்வரும்  26.02.2015 வியாழன் மாலை 05.30 மணியளவில்  சென்னை தேனாம்பேட்டை  ACCOUNTANT GENERAL  அலுவலக வளாகத்தில் அதன் மாநிலத் தலைவர் தோழர். J .ராமமூர்த்தி அவர்கள் தலைமையில்  நடைபெற உள்ளது.  மூத்த தலைவர்கள்  தோழர்.  ராஜா ஸ்ரீதர் (SRMU ),  தோழர். தியாகராஜன் (FNPO ), தோழர். K.V.S. , தோழர். K.R. , தோழர் . D. கோபால கிருஷ்ணன் (BSNLEU ), தோழர் . இளங்கோவன்  DREU  மற்றும் AIDEF  உள்ளிட்ட சங்கங்களிலிருந்து பலர்   கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்திட உள்ளார்கள் . கூட்ட ஏற்பாட்டினை மகா சம்மேளனத்தின்  தமிழக பொதுச்செயலர் தோழர் . துரைபாண்டியன் அவர்கள் செய்துள்ளார்கள்.  எனவே அஞ்சல் - RMS  பகுதியின் அனைத்து  நிர்வாகிகளும்  தோழர்/ தோழியர்களும்  தவறாமல் கலந்துகொண்டு  மறைந்த தலைவர் தோழர். வியாஸ் அவர்களுக்கு புகழஞ்சலி   செலுத்திடுமாறு  கேட்டுக் கொள்கிறோம்.

RESULTS OF THE UNFILLED(RESIDUAL) GDS VACANCIES TO PA DR


CHQ LR ON MISMATCH OF P.A. VACANCIES AND SHORTAGE OF P.A.s IN TN CIRCLE



CHQ LR TO DEPT. ON CORRECTIONS IN SSA ACCOUNT RULES 2014



Amendment to Central Civil Service (Leave) Rules, 1972 - Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights and Full Participation) Act, 1995 (PWD Act, 1995)

Minutes of the meeting of the Standing Committee held on 7th May,2014.

Wednesday, February 25, 2015

Frequently Asked Questions (FAQs) on Compassionate Appointment

CHQ LETTER TO THE MEMBER (PLI) ON Mc CAMISH HASTY MIGRATIONS IN TN CIRCLE


CIRCLE UNION LETTER TO PMG, CCR ON PM GRADE I OFFICIALS


RESULT OF LDCE FOR POSTMASTER GRADE I DECLARED BY THE DEPT.

A LETTER TO PMG, SR FROM NFPE COC, TAMILNADU


A SHARE FROM 'ERODE P3 WEB SITE ' SHARING A POETIC VERSION FROM 'VIKATAN MAGAZINE'

சிந்தனைக்கு  ஒரு கவிதை 

ஈரோடு தோழர் சுவாமிநாதன்  தங்களுடைய அஞ்சல் மூன்று வலைத்தளத்தில்  'விகடன்' பத்திரிகையில் வெளிவந்த சிந்தனையைத் தூண்டும் 'புலி ஆடு புல்லுக்கட்டு' புதிர் விளையாட்டு  ஆட்டம் பற்றிய  
ஒரு கவிதையின் பகிர்வை அளித்துள்ளார். கவிதை என்பது காலத்தால் அழியாதாது. பல சிந்தனைகளை சில வரிகளில் தருவது.  இந்தக் கவிதையின் முடிவில் கதையின் களமாகிய 'ஆறு ' காணாமல் போயிருந்தது என்று முடிக்கப்பட்டுள்ளது.   

ஆம்  நாம் இன்று 'INFOSYS '  'FINACLE ' 'McCAMISH ' என்று தினம்ஆடும் -  ஆடு, புலி , புல்லுக்கட்டு ஆட்டத்தில், கடைசியில்  நம்முடைய 
களமாகிய  'ஆறு '( இலாக்கா ) காணாமல் போய்விடும் என்று 
இந்தக் கவிதை  நமக்கு தெரிவிக்கிறது  !  

நமக்குப் புரிகிறது ! நம்மை ஆளும் நிர்வாகத்திற்கு இது புரிகிறதா ?  புரியுமா ? புரிய வேண்டும் என்பதே நம் வேண்டுகோள் ! 
நாம் அவர்களுக்கு எதிரி அல்ல . பிரச்சினைகளை எடுத்துச் சொல்லுகிறோம். தீர்க்க வேண்டிய  அல்லது இலாக்காவை காக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இருப்பதால்  
அவர்களிடம்தான் நாம்  சொல்ல முடியும் . 

பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொண்டு  அதனை தீர்ப்பதில் 
அவர்கள் ஈடுபட வேண்டும் என்பதே  நம்முடைய  வேண்டுகோள். 
மாறாக  இத்தனை துன்பங்களையும் தாங்கி நிற்கும்  ஊழியர்களையே  அவர்கள் எதிரிகளாக நினைப்பது  தவறல்லவா ?  

அஸ்திவாரமான  ஊழியர்களுக்கு,  பிரச்சினைகளில்  நிர்வாகம் அரவணைப்பு கொடுக்க வேண்டும் . அடித்து  நொறுக்க எண்ணக்கூடாது ! 
அடித்து நொறுக்கினால் 'ஆறு ' காணாமல் போனபின்பு  அவர்களும் இருக்க மாட்டார்கள் ! இதுவே முற்றிலும் உண்மையாகும் !
இதுவே 'புலி, ஆடு, புல்லுக்கட்டு' கவிதை தரும் செய்தி !

Tuesday, February 24, 2015

REPLY FROM CPMG, TN ON OUR REQUEST FOR PAYMENT ON THE EVE OF BANK EMPLOYEES STRIKE


PRESS NEWS:- INFOSYS WAS PENALISED OF RS.9.33 CRORES FOR DEFAULT IN SERVICE

தொடர்ந்த  சேவைக் குறைபாட்டுக்கு  INFOSYS   மீது  BESCOM  ரூ. 9.33 கோடி  தண்டம் (PENALTY ) வசூலித்ததாக  பத்திரிக்கை  செய்தி . 
 அஞ்சலில் உள்ள சேவைக் குறைபாட்டுக்கு  நம் அதிகாரிகள்  தண்டத்தொகை வசூலிப்பார்களா  அல்லது மேலும்  'BILL'  போட்டு  கொடுப் பார்களா ? காலம்தான்  பதில் சொல்ல வேண்டும் !
பார்க்க  பத்திரிக்கை  செய்தி :-
BANGALORE MIRROR 
cover story.

Blame it on Infosys, says Bescom MD on excess power bills
By Niranjan Kaggere, Bangalore Mirror Bureau | Apr 22, 2014, 02.00 AM IST

Pankaj Kumar Pandey says power utility had identified 150 issues based on consumer complaints, but Infosys was able to rectify just 85. Only govt can scrap the contract

In February this year, some United Bank of India employees had reportedly blamed inherent deficiencies in 'Finacle', the financial software provided by Infosys, the Bangalore based IT bellwether giant, for the bank's mounting NPAs. The NPA controversy had led to the exit of Archana Bhargava, chairman of the bank. Now, Bangalore Electricity Supply Company (Bescom) has called into question the reliability of the company's billing software.

Under heavy criticism from consumers and the Karnataka Electricity Regulatory Commission (KERC) for persistent errors in the billing system, Pankaj Kumar Pandey, managing director, Bescom, blamed Infosys for the mess. Making his submission before KERC on Monday during a public hearing over a tariff review petition submitted by all the five Escoms for the year 2014-15, Pandey said, "We are not satisfied with the software."

Pandey admitted that he has been aware of the faulty software for some time, but claimed his hands were tied. "We have received several complaints about the variations in bills generated by the software," Pandey told the panel of KERC members. "We are not satisfied with the software. In fact, we had issued several notices to them (Infosys) and even penalised them by levying a penalty of Rs 9.33 crore. Even then they have not done anything. Based on the complaints, we identified about 150 issues and asked them to sort them out. However, they were able to address only 85 of them. They blame the glitches on the server not working properly."

When the KERC panel asked Pandey why the software hadn't been changed despite being aware of the glitches, Pandey said, "The government has to take a decision on it as it was the government which handed Infosys the contract. We have written to the chief secretary about the burgeoning problem pertaining to billing and we will soon hold a meeting with the chief secretary in this regard. The government has to take a decision on it."

The problem had snowballed into a major controversy with several individual consumers, consumer rights activists complaining to both Bescom and KERC. "It is not just one or two issues, but several," N Chandra Shekhar, a consumer activist, told BM. "Ever since Bescom switched over from their previous billing software to Infosys billing software, payment of bills online has become a major problem. A few months ago, RR numbers were mixed up resulting in the erroneous calculation of consumption."

The shadow-boxing between Bescom and Infosys over billing-related issues has been going on for quite some time. It turned into a slanging match when the billing system crashed in October last year. The bug was fixed, but the problem again resurfaced in November. And while Bescom has been blaming Infosys, the latter has claimed that the power utility owes it crores of rupees.

Monday, February 23, 2015

"For the past 3 days cant even do a single transaction in CBS finacle." - voice of the common staff

இது  மக்களின்  குரல்  !  
உரோமாபுரி   பற்றி  எரிகிறது ....  
'இன்னும்  கொஞ்சம்  migration எண்ணெய்   ஊற்றுகிறேன்"  
என்று கூறும்   நிர்வாகம் ...  

இலாக்கா  வாழுமா ? வாடிக்கையாளர் சேவை 
மேலும் மேலும் சீரழியுமா ?  
BSNLஐ  முடமாக்கி ..  RELIANCE  அம்பானிகளை 
உலகக் கோடீஸ்வரர்கள் ஆக்கியது போல.....
   
அஞ்சலிலும் செய்திடவா   இந்த  வேலைகள்  ? 
காலம்  பதில் சொல்லட்டும் .... 

==============================================================================
Lsg PM GrKarthik Eyan and 5 others commented on this.

Muthu Lsg PM Gr feeling broken
For the past 3 days cant even do a single transaction in CBS finacle.
If they cant give support for 1,50,000 postal outlets then Why shoud they asking for migration?
Public uttering filthy languages against counter staffs and postmaster and cant even tolerating these kind of wounds
Like ·  ·