Sunday, January 31, 2016

LATEST NEWS FROM CIRCLE UNION ON DIFFERENT MATTERS

என்ன செய்கிறது  உங்கள் மாநிலச் சங்கம் ?

கடந்த 28.01.2016 அன்று  -  ஏற்கனவே 08.01.2016 அன்று  நம் மாநிலச் சங்கத்தினால் கொடுக்கப்பட்ட கடிதத்தின்  அடிப்படையில் - பல்வேறு பிரச்சினைகள் குறித்து   CHIEF  PMG அவர்களிடமும் , DPS  HQ /DPS CCR அவர்களிடமும்  நாம் பேசினோம் .  அதனடிப்படியில்  மாநில நிர்வாகம் அளித்த பதில்களை  கீழே  தருகிறோம்.

1.ஒத்திவைக்கப்பட்ட அடுத்த RJCM  கூட்டம் எதிர்வரும்  16.2.2016 அன்று நடைபெறும் . அதற்கான  SUBJECTS  01.02.2016 க்குள் கிடைக்குமாறு அளிக்க வேண்டும்.

2.வெள்ள முன்பணம்,  பாதிக்கப்பட்ட பகுதிகளில் விண்ணப்பித்த ஊழியர்களுக்கு  நிச்சயம் அடுத்த வாரத்தில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மாநிலம் முழுதும்  வழங்கிட  நாம் கோரினோம். இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டப் பகுதிகளுடன்  பாண்டிச்சேரி மற்றும் தூத்துக்குடி  மாவட்டப் பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கும்  சேர்த்து வழங்கிட  CHIEF  PMG அவர்கள் உறுதியளித்துள்ளார்.

3. வெள்ளம் பாதித்த மாவட்டப் பகுதிகளில் WELFARE  FUND இல் இருந்து  உதவித்தொகை விண்ணப்பித்த GDS  ஊழியர்களுக்கு,  உரிய  VAO சான்றாவது  இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே  வழங்கிடப்படும் என்று CPMG  தெரிவித்தார். இதற்கு  மாநில  சேமநல நிதியில்  உரிய அளவு தொகை இல்லையெனில், மத்திய  சேமநிதித் தொகுப்பில் இருந்து கேட்டு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும்  குறைந்த பட்சம் ரூ.5000/- வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

4. நாம் கேட்டுக் கொண்டபடி  GDS  இலிருந்து தபால்காரராக தேர்வு பெற நடத்திடவேண்டிய  தேர்வுக்கான  அறிவிக்கையானது  கண்டிப்பாக அடுத்த வாரத்தில்  வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

5. 2015க்கு அறிவிக்கப்படவேண்டிய  LGO  TO P .A . தேர்வுக்கான அறிவிக்கை நிச்சயம் இந்த மாதத்தில் (FEBRUARY 2016) 15 இலிருந்து 20 நாட்களுக்குள் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்தார்.

6. 2015 -16 க்கான  5 ஆவது LSG  பதவி  உயர்வுப் பட்டியல்  தயார் நிலையில் உள்ளது.  கடந்த பட்டியலில் உள்ளவர்கள் பதவி உயர்வில் சென்று சேர்ந்தவுடன் இது  வெளியிடப்படும் என்று  தெரிவிக்கப் பட்டது. அதாவது அடுத்த வாரத்தில் வெளியிடப்படலாம். இதுவரை  அஞ்சல் பகுதியில் மட்டும்  378 பேருக்கு பதவி உயர்வும் , இதன் காரணமாக  378 எழுத்தர் காலியிடமும்  நாம்  போராடிப் பெற்றுள்ளோம்.

7.மேலும்  "போனஸ்" ஆக 2016-17 க்கான  LSG  பதவி உயர்வுப்  பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது  உபரிச் செய்தி. 

8. இது தவிர , இதுவரை  மருத்துவ  காரணங்கள் மற்றும் ஒய்வு பெறுவது நெருக்கத்தில் உள்ளது என்பது போன்ற காரணங்களால் பதவி உயர்வு DECLINE  செய்த  ஊழியர்களின்  காலியிடங்களுக்கும்  நிரப்பிட மேலும் ஒரு பட்டியல் வெளியிடப்படும் என்ற உறுதியை  CHIEF  அவர்களிடம் கோரிப் பெற்றுள்ளோம் என்பது  சிறப்பான  செய்தியாகும்.

9. ஏற்கனவே  கடந்த 2013-14, மற்றும் 2014-2015 ஆண்டுகளில் நம்முடிய கடுமையான முயற்சியினால் அறிவிக்கப்பட்ட  SCRAPPING COMMITTEE மூலம்  CONDEMNATION  அறிவிக்கப்பட்ட  COMPUTER  மற்றும் அதன் உப பொருட்களுக்கு மாற்றாக   புதிய  கணினி/ உப பொருட்கள் வாங்கிட  நம் மாநிலச் சங்கத்தின் முயற்சியால்  கடந்த 16.12.2014  JCM இலாக்கக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது உங்களுக்குத் தெரியும்.  

பின்னர் மீண்டும் மீண்டும்  FOUR  MONTHLY  MEETING , RJCM  MEETING  என்று பிரச்சினை வைக்கப்பட்டு  கடந்த 13.6.2015 மற்றும் 23.11.2015 தேதிகளில் மீண்டும் துறைச்செயலருக்கு  நினைவூட்டுக் கடிதங்கள் அளித்ததன் விளைவாக, இலாக்கா    நம்முடைய பொதுச் செயலருக்கு   தமிழகத்திற் கென்றே தெளிவான  தனியான பதிலையும்  அளித்துள்ளது. அதனடிப் படையில்  இந்த நிதி ஆண்டில்  2013-14 மற்றும் 2014-2015 க்கான ESTIMATE க்கான நிதி ஒதுக்கப்பட்டு  பெற  உள்ளோம்.  இது குறித்த  உரிய ஆவணங்களுடனான செய்தியை தனியே  தருகிறோம். 

இது  தமிழ் மாநிலச் சங்கத்தின் அயராத  முயற்சிக்கு  கிடைத்த வெற்றியாகும். வேறு எந்த மாநிலங்களிலும் பெறாத  நிலையாகும். இதற்கு   இடைவிடாது முயற்சித்த முன்னாள்  பொதுச் செயலர் தோழர். KVS ,  தோழர். கிருஷ்ணன் மற்றும் இந்நாள் பொதுச் செயலர் தோழர். பராசர்  ஆகியோருக்கும்  நம் நன்றி உரித்தாகும்.

10. இன்று (30.01.2016) Mc CAMISH  பிரச்சினை  காரணமாக  நாட்டின் அனைத்து பகுதிகளிலும்  தொடர்பற்றுப் போனதால்  B .O . க்களில் பெறப்பட்ட பல நூற்றுக் கணக்கான  RPLI  PREMIUM   S .O . க்களில் கணக்கில் கொண்டு வர இயலவில்லை. இது குறித்த புகார் மாநிலச் சங்கத்திற்கு மதியம்  3.30 மணியளவில் கிடைக்கப் பெற்றவுடன் , இன்று நிர்வாக அலுவலகங்களுக்கு விடுமுறையான போதிலும்,  நாம் அலைபேசியில்  CHIEF  அவர்களிடம் பிரச்சினையைக் கூறி புகார் அளித்தோம். அவரும் மற்றும் DPS HQ  ADDL CHARGE  நிலையில் உள்ள  DPS CCR அவர்களும், உடன்  DTE  வரை பேசி  உரிய ஆவன  நடவடிக்கையை விரைவாக எடுத்து  மாலை  04.55 க்கு  நமக்கு சரி செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்தார்கள் .மாலை  05.05 மணி  முதல் Mc CAMISH செயல்படத் துவங்கியதாக   பல பகுதிகளில் இருந்தும் நமக்கு  தோழர்கள் தெரிவித் தார்கள். உடன் நடவடிக்கை மேற்கொண்ட  CPMG  மற்றும்  DPS  CCR  ஆகிய  இருவருக்கும்  நம் நன்றி !

                  மீண்டும்   இதுபோன்ற  பல செய்திகளுடன்  சந்திப்போம் !


Saturday, January 30, 2016

CIRCLE UNION HAS TAKEN UP THE CASE - CHIEF PMG, TN INITIATED ACTION TO PROMOTE 16 OFFICIALS INTO PM GRADE III

என்ன செய்கிறது  உங்கள் மாநிலச் சங்கம் ?

கடந்த 08.01.2016 அன்று தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கோரி  நம்முடைய CHIEF  PMG அவர்களிடம் கடிதம் அளித்துப் பேசினோம். இது குறித்து நம்முடைய தமிழக அஞ்சல் மூன்று வலைத் தளத்தில் கடித நகலை அன்றைய தேதியிலேயே பிரசுரித்திருந்தோம். அந்தக் கடிதத்தின்   ஒரு  பகுதி   கீழே   உங்கள்   பார்வைக்குத் தருகிறோம்.  

CHIEF PMG அவர்கள் , இதில்  பல பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த செய்தி தனியே தருகிறோம்.

No. P3/ General                                                                    Dt. 08.01.2016             
To
Dr. Chales Lobo, IPoS.,
Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai 600 002.

Respected Sir,

Sub:  Request for immediate follow up action on long pending issues which were discussed/
       agreed upon  at  various  informal/formal meetings  –  Reg.
                                                                                   ….

The kind and personal attention of the CPMG, TN   is requested on the under mentioned items for  immediate intervention/taking favourable decision for immediate settlement.
 ===============================================================================

4.     Request to hold DPC for giving regular promotion from Postmaster Gr. II to  Postmaster Gr. III since 16 Gr. II officials are completed the minimum required service and 39 Gr. III posts are reportedly vacant. Till such time of completing the formalities for DPC process, eligible officials may be given promotion on adhoc basis.

============================================================================

நம்  கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டு POSTMASTER  GRADE  III க்கான 39 காலியிடங்களில் , தகுதியான 16 பேருக்கு  பதவி உயர்வு வழங்கிட  அனைத்துக் கோட்டங்களுக்கும் கோப்புகள் கோரப்பட்டுள்ளன. இது  நமது தமிழ் மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். உடன் நடவடிக்கைக்கு உத்திரவிட்ட  நம்முடைய  CHIEF  PMG அவர்களுக்கு  நம்  நன்றி ! 

( WE ARE VERY MUCH THANKFUL TO OUR CHIEF PMG FOR TAKING SWIFT ACTION ON THIS MATTER )




Red Salute the martyrdom of soldiers who lost their lives defending the sovereignty of the nation.

Promotion of Govt. Servants exonerated after retirement - Procedure and Guidelines to be followed

NO REVISION IN SALARY IF BSNL NOT PROFITABLE - CORPORATE PLAN TO SELL OUT BSNL

BSNL Chairman and Managing Director Anupam Shrivastava today said there won’t be any revision in salary next year unless the company is profitable.

“This is the most crucial year in the history of BSNL, because 2017 will be the year when our salaries are going to be revised as a third PRC (Pay Review Committee), and let me tell you … Unless we are profitable the salary is not goingto be revised,” Shrivastava said.

Speaking after launching BSNL Mobile Data Offload service in Karnataka, he said the organisation has to be made profitable.

Pointing out that in the past Air India and ITI couldn’t revise their salaries, Shrivastava said, “so 2017 is a very important year and we have to make sure that this year our profit and loss account looks good.”

“I have instructed all my IFA’s that their prime dutyis to look towards the revenue. Gone are the days when we were sitting and only signing on the file. No, revenue is your prime responsibility,” he said.

He said Karnataka Circle is not doing comparatively good, and he has got commitment from the senior officials that before March 31 they will make the circle “again profitable”.

BSNL after about four years of reporting losses posted anoperating profit of Rs 672 crore for the financial year 2014-15 compared to an operating loss of Rs 691 crore in the previous fiscal.

Calling 2014-15 as the turnaround year for BSNL as it came back to operational profit of Rs 672 crore, Shrivastava said with the support of all the officers and employees the company will increase the profit and within another two to three years (2018-19) it will achieve net profit also.

He said, “it (operational profit) is of very great significance because our salary expense is whopping Rs 15,000 crore, which is more than the top line of many private and government PSUs.”

“… We are not only able to meet such huge staffexpenses, but still we are left with enough cash to do theoperations and maintain on our own and yet come up with a profit of Rs 672 crore. This is the thing we should be proud of, we are now not dependent on anybody,” he added.
Source: India Today

Sack erring government officials who don't mend ways, PM tells secretaries - This will leads to slavery system again

பிரதம அமைச்சர் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் இந்த சட்டம் அதிகார வர்க்கத்தினால் தவறாக பயன்படுத்தப்பட அதே நேரம் CORPORATE முதலாளிகளுக்கு ஆதரவாக போராடும் ஊழியர்களை வெளியில் விரட்டி அடிமைச் சமுதாயம் அமைத்திட வழி கோலும் என்பதே ஜனநாயகப் போராளிகளின் பார்வையாகும்.

Sack erring government officials who don't mend ways, PM tells secretaries

TNN | Jan 28, 2016

 NEW DELHI: In a stern message to government officials refusing to mend their ways despite repeated complaints, Prime Minister Narendra Modi on Wednesday asked secretaries to carry out assessment of such employees and recommend action, including dismissal and slashing their pension. 

The PM also asked all central government departments, which have to extensively deal with the public, to set up a grievance-monitoring mechanism. 

Thed PM's warning came as he reviewed grievances relating to the excise and customs department during his monthly interaction with central government secretaries and chief secretaries of states through Pro-Active Governance and Timely Implementation (PRAGATI), a web-based interface, sources said. 

"Though he (the PM) specifically asked the excise and customs department to identify and take action against such officials, he said the message is for all secretaries and chief secretaries," a secretary level official told TOI. 

The department of personnel and training (DoPT) rules specify the circumstances under which an a government officer can be "retired" in "public interest". Rule 56(J) of Fundamental Rules says, "Notwithstanding anything contained in this rule, the appropriate authority shall, if it is of the opinion that it is in public interest to do so, have the absolute right to retire any government servant by giving him notice of not less than three months in writing or three months' pay and allowances." 

Employees attaining 55 years can be impacted under this rule. 

Similarly, Rule 48 of Central Civil Services (Pension) Rule says, "At any time after a government servant has completed 30 years qualifying service, (a) he may retire from service or (b) he may be required by the appointing authority to retire in public interest, and in case of such retirement, the government servant shall be entitled to a retiring pension."


 As per rules, the government can initiate disciplinary action against any employee for dereliction of duty, and his pension and other benefits can be withheld pending investigation. 
In an official release, the PMO said that taking strong exception to public complaints and grievances related to the customs and excise department, the PM asked for "strict action against responsible officials. He urged all secretaries whose departments have extensive public dealing, to set up a system for top-level monitoring of grievances immediately".

 Officials said though the Central Board of Excise and Customs said it had already been initiating steps to warn errant officials and installed CCTV cameras to keep tab on them, the PM observed that they must take quick action in such cases. 
Sources said Modi also asked top bureaucrats to work together and resolve prickly issues quickly and get out of the "government way of doing business" by passing files from one to another.
 
This was Modi's ninth such interaction through PRAGATI. 

Source :  http://timesofindia.indiatimes.com/

MEETING OF NJCA NOTIFIED TO BE HELD ON 8..2016 AT NEW DELHI


MEETING OF THE NODAL OFFICERS ON 2.2.2016 AT NEW DELHI TO PROCESS THE 7TH CPC RECOMMENDATIONS


RECOMMENDATION OF THE SEVENTH PAY COMMISSION - COMMENTS SOUGHT FROM STAFF SIDE ON GAZETTED AND RESTRICTED HOLIDAY, MAY DAY ETC.



Constitution of Empowered Committee of Secretaries for processing the Report of the Seventh Central Pay Commission


TN CONFEDERATION MEETING HELD AT SHASTRI BHAVAN ON 28.1.16 IN MEMORY OF COM. JAYASEELAN, FORMER SECRETARY OF CONFEDERATION, TN.

Former secretary of Confederation TN, Com.M.Jayaseelan's 6th Memorial meeting was held on 28.1.2016 at Shastri Bhavan, Chennai. Presided by com.J.Ramamurthy President confederation,  welcome address by com. S. Samraj, Secretary COC, Shastri Bhavan,  program address by Com. S. Sundaramurthy,(I.T.) Treasurer, confederation. Com. M.Duraipandian, General Secretary Confederation remembered memories of com. M.Jayaseelan. 

A Convention was also held on Pay Commission & Pension related matters. Com.Venkatesan, General secretary, ITEF, Com. R.B. Suresh, C/S, AIPAEA, Com.K.Gambeeram, State Sec.,CGHS and many other office bearers have taken part. Com. P. Elangovan, General Secretary, Export and Import Employees Assn.,TN delivered vote of thanks. some of the photos taken during the occassion are placed below for your view.





Thursday, January 28, 2016

ALL LEADERS AND COMRADES ARE INVITED TO COM. M. JAYASEELAN MEMORIAL LECTURE ON BEHALF OF CCGE&W, TN AT SHASTRI BHAVAN ON 28.1.2016




DISCUSSIONS WITH THE PMG, CCR BY TN POSTAL JCA TWICE ON 27.1.2016 ; EXPECTING FAVOURABLE SETTLEMENT FOR CASUAL LABOURER ISSUE AND COMBINATION OF DUTY TO POSTMAN/MTS

அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

ஏற்கனவே அறிவித்தபடி தமிழ் மாநில NFPE  மற்றும் FNPO  COC சார்பாக இன்று  (27.1.2016) காலை சுமார் 12.00 மணியளவில் PMG CCR  அவர்களை மாநிலச் செயலர்கள் சந்தித்து  CASUAL ஊழியர்கள்  நீக்கம் ரத்து செய்தல் , அண்ணா சாலை மற்றும் சென்னை GPO தபால்காரர்கள்  பணி இணைப்பு உத்திரவு ரத்து செய்தல் உள்ளிட்ட பிரச்சினைகள்  குறித்து  பேசினோம் . PMG, CCR  அவர்களிடம்  TN  PJCA  சார்பாக அளிக்கப்பட்ட கடித நகல் கீழே உங்கள் பார்வைக்கு அளித்துள்ளோம்.

பேச்சு வார்த்தையில் NFPE இணைப்புக் குழு கன்வீனர் தோழர்.G. கண்ணன்(P4), FNPO  இணைப்புக் குழு கன்வீனர் தோழர். P . குமார் ,  NFPE அஞ்சல்  மூன்று மாநிலச் செயலர் தோழர். J .R ., FNPO  அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். P . சுகுமாரன் , NFPE  கணக்குப் பிரிவு மாநிலச் செயலர் தோழர். R .B . சுரேஷ், அஞ்சல் மூன்று மாநிலத் தலைவர் தோழர். P . மோகன் , மாநில நிதிச் செயலர் தோழர். A . வீரமணி  உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்துகொண்டு பேசினோம்.

ஆரம்பத்தில் பேச்சு வார்த்தையில் பிரச்சினைகள் எழுந்தபோதும், இறுதியில்  PMG, CCR  அவர்கள் நம்முடைய கடுமையான  வாதத்தின் உட்கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு  நிச்சயம்  CPMG மற்றும்  DPS , CCR  ஆகியோர்களைக்  கலந்து கொண்டு ஒரு சுமுகமான முடிவினை மாலையில் தருவதாக உறுதி அளித்தார்கள்.  அதன் அடிப்படையில்  பேச்சு வார்த்தை மதியம் 1.30 மணியளவில்  முடிவுக்கு வந்தது. 

ஆனால், 27.1.2016 காலையிலேயே  ஒரு உத்திரவு ரகசியமாக இடப்பட்டு மதியம்  அண்ணா சாலையில்  அமலுக்கு கொண்டு வரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் நகலும்  உங்கள் பார்வைக்கு கீழே தருகிறோம். 

அதன் அடிப்படையில் SPEED DELIVERY  செய்யும் தபால்காரர்கள் அவரவர்கள் BEAT இல் அவர்களே PICK UP  SERVICE மேற்கொள்ளவேண்டும் என்றும் ஏற்கனவே PICK  UP  SERVICE  செய்யும் C /L ஊழியர் 7 இலிருந்து 5 ஆக குறைக்கப்படுவார்கள் என்றும்,  இனி பேருந்துகளில்தான்  PICK  UP  செய்யவேண்டும் என்றும் அதற்கு தனியே LUGGAGE  CHARGE போட்டுக் கொள்ளலாம் என்றும் வேடிக்கையான ஆனால் விபரீதமான உத்திரவு அது. 

அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகத்தில் மட்டும்  மாதம் 70000 தபால்கள் SPEED மற்றும் BUSINESS  PARCEL  PICK  UP  சேவையின் கீழ் வருகிறது. இதன் சராசரி வருமானம்  ரூ. 50,00,000/- .  PICK  AGENT  ஆக செயல்படும் 7 CASUAL  ஊழியர் அனைவருக்குமே  COLLECTORATE  ஊதிய அடிப்படையில் அளிக்கப்படும் சராசரி ஊதியமோ  ரூ. 50,000/-. இதர  PICK  UP TRANSPORTATION  செலவு  சராசரியாக ரூ.20,000/-. இது மொத்த வருவாயில் சுமார் 1.4% ஆகும். 

இந்தப் பணி வெளியார் AGENCY  க்கு கொடுத்தால் அவர்களுக்கு   குறைந்த பட்சம் வருவாயில் 10%  அளிக்கும்படி  வரும். அவர்கள் PICK  UP மட்டுமே செய்வார்கள்  . நம் அப்பாவி  CASUAL  கொத்தடிமைகளோ  SPOT PICK  UP உடன் BOOKING , TRANSMISSION  இரண்டும் செய்து தருவார்கள். ஆனால் நம் துறை அதிகார வர்க்கம் அவர்களை வெளியேற்றிவிட்டு  AGENCY முறையை கொண்டுவர துடிப்பது, வேடிக்கையானதும் , வினோத மானதும் ஆகும். எனவே இந்த உத்திரவு   நம்முடைய  ஊழியர்களை மட்டுமல்ல , PJCA  தலைவர்களையும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது.

மாலை சுமார் 05.00 மணியளவில் தமிழக அஞ்சல் JCA சார்பாக தோழர்.J .R , தோழர். G . கண்ணன் , தோழர். P . சுகுமாரன் ஆகிய மூவரும் PMG CCR அவர்களை சந்தித்தோம். அதற்கு முன்னரே  , கடந்த இரண்டு நாட்களாக CPMG அலுவலக வாளாகத்தில்  குவிக்கப்பட்டிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஊழியர் தரப்பு  பிரதிநிதிகளை  சூழ்ந்தே வர ஆரம்பித்தனர்.  

வேடிக்கை என்னவென்றால் , இதுவரை இல்லாத வகையில்  PMG CCR CHAMBER வாயில் வரை அவர்கள் ஏதோ தீவிரவாதிகளைத் தொடர்வது போல, எங்களைச் சூழ்ந்து  தொடர்ந்தே வந்தனர் என்பதும் , அவர்களும் பாதுகாப்புக்கு  உள்ளே வருவோம் என்றதும் இதுவரை  தமிழக  அஞ்சல் வரலாற்றில்  இல்லாத  ஒரு வேடிக்கையான நிகழ்வு ஆகும் . பிறகு எங்கள் நம்பகத்தன்மைக்கு  காவல்துறையினருக்கு நாங்கள் உறுதி கூறிய பின்னர்தான் (?) அவர்களே கதவுக்கு வெளியில்  நின்றனர் என்பது  நகைப்புக்கு இடமான ஒன்றாகும். 

ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் மீது நம்பிக்கை இழந்த நிர்வாகத்தை, அல்லது சந்தேகம்கொண்ட நிர்வாகத்தை,  கடந்த 30 ஆண்டு  தமிழக அஞ்சல் துறை வரலாற்றில் நாம் இப்போதுதான் பார்க்கிறோம். இருந்த போதும், பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்,    நாம் கோபம்/வருத்தம்  ஏதும் கொள்ளாமல்  PMG CCR அவர்களை அணுகினோம்.  புதிய உத்திரவு எவ்வளவு தவறானது என்று எடுத்துக் கூறினோம்.  அதனை உடனே ரத்து செய்வதாகவும் , PICK  UP SERVICE க்கு மாற்று ஏற்பாடாக அரசு வாகனங்களை உபயோகப்படுத்த முடிவெடுத்துள்ளதாகவும் PMG,CCR அவர்கள் தெரிவித்தார். 

அதேபோல  CHENNAI  GPO மற்றும்  அண்ணா சாலை  தலைமை அஞ்சலகங்களில் இனி தபால்காரர் மற்றும்  MTS  ஊழியர்களுக்கு  பணி இணைப்பு இருக்காதெனவும் உறுதி அளித்தார். பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட  27 CASUAL  ஊழியர்களுக்கு உடன்  பணி  அளித்திட உரிய எழுத்து பூர்வமான உத்திரவாதம் அளிக்க வேண்டினோம்.  CPMG  யுடன் கலந்துகொண்டு இன்று மாலையே , நாளை காலை கிடக்கும் வண்ணம் உரிய உத்திரவுகள் இடப்படும் என்றும்  உத்திரவாதம் அளித்துள்ளார்  PMG CCR  அவர்கள். 

எனவே   நாளை  காலை  எழுத்து   பூர்வமான   உத்திரவு    பெற்றவுடன்,   நம்முடைய   முடிவுகளை அறிவிப்பதாக, மாலை சுமார் 06.00  மணிக்கு   கூடியிருந்த ஊழியர்களிடையே   நாம் அறிவிப்பினை செய்தோம். நாம் கலைந்தவுடன்  நம்மை முற்றுகையிட்டிருந்த காவல்துறை பணியாளர் களும் கலைந்து சென்றனர் என்பது வேடிக்கையே.

நல்ல முடிவை எதிர் நோக்கிக் காத்திருக்கிறோம். நமக்கு கண்ணியமே பெரிது .  காவல்துறை பெரிதல்ல  என்பதை  நிர்வாகத்திற்கு உணர்த்து வோம்.

"கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு  காலத்தினாலே  அழியாது "

COPY OF  TN PJCA LETTER



INTERMITTANT ORDER ISSUED BY PMG, CCR 
NOW ASSURED TO BE WITHDRAWN



Wednesday, January 27, 2016

Immovable Property Return for the year 2015 - circular of the DOPT dt. 27.1.2016.

PROTEST DEMONSTRATION BY TN NFPE COC AGAINST THE ARBITRARY DISENGAGING OF 27 CASUAL LABOURERS AT ANNA SALAI HPO RESULTANTLY COMBINING THE DUTIES OF THE POSTMAN/ MTS.

FIRST STEP POWERFUL PROTEST DEMONSTRATION AGAINST THE ARBITRARY DISENGAGING OF 27 CASUAL LABOURERS AT ANNA SALAI HPO RESULTANTLY COMBINING THE DUTIES OF THE POSTMAN/ MTS.
DEMONSTRATION UNDERTAKEN BY TN NFPE COC ON 25.01.2016 AT THE CLOSING HOURS IN FRONT OF O/O CPMG, TN. PL SEE SOME OF THE PHOTOS TAKEN DURING THE PROTEST DEMONSTRATION.
==============================================================================

சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் திடீரென்று CASUAL LABOURER களாக கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 27 ஊழியர்களை வெளியேற்றி சென்னை பெருநகரமண்டல நிர்வாகம் (இப்படித்தான் CHIEF POSTMASTER , ANNA  ROAD HPO பதில் அளித்துள்ளார்) அடாவடியாக உத்திரவிட்டது. ஆனால் PMG அவர்கள் இதற்கும் மண்டல நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என்கிறார்.

எவர் செய்தார் என்பது நமது கேள்வியல்ல. அது நிர்வாகத்தின் உள்விஷயம். இதனால் 27 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களால் விடுப்பு மற்றும் காலிப் பணியிடங்களில் செய்யப்பட்ட பணிகள் அனைத்தும் தற்போது பணி இணைப்பு செய்யப்பட்டு, இருக்கும் தபால்காரர்கள் மற்றும் MTS ஊழியர்களைக்  கொண்டு  செய்யப் பணிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்தின் இந்த மனிதாபிமானமற்ற  நடவடிக்கையை கண்டித்தும் உடனே அந்த 27 ஊழியர்களையும் பணிக்கு கொண்டுவரக் கோரியும் சென்னை CPMG அலுவலகம் முன்பாக 25.01.2016 மாலை தமிழக அஞ்சல் RMS(NFPE) இணைப்புக் குழு சார்பாக மாபெரும் எழுச்சி மிக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு இணைப்புக் குழு தலைவர் தோழர். பரந்தாமன் (R 4) தலைமை ஏற்க, முன்னோட்ட உரையினை இணைப்புக் குழு கன்வீனர் தோழர். கண்ணன்(P4) அவர்கள் வழங்க , விளக்கமாக பிரச்சினையை அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J. இராமமூர்த்தி எடுத்துப் பேச, RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். ரமேஷ் கண்டன உரையாற்ற, CASUAL, COTINGENT, PART TIME ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். சிவகுருநாதன் நன்றியுரை ஆற்ற , நூற்றுக் கணக்கான தோழிய/தோழர்களால் விண்ணதிரும் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டு ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புதன் காலை 11.00 மணியளவில் மண்டல நிர்வாகத்தால் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டிருக்கிறோம். FNPO COC தோழர்களும் இந்த பேச்சு வார்த்தைக்கு வருவதாக, கண்டன ஆர்ப்பட்டத்திற்குப் பின்னதான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.


பேச்சு வார்த்தை வெற்றியடைந்து அந்த 27 ஊழியர்களும் பணிக்கு திரும்பினால் மிகுந்த மகிழ்ச்சி. இல்லையேல் , அடுத்த கட்ட போராட்டம் அஞ்சல் JCA போராட்டமாக வீறு கொண்டு உடன் எழும் என்பதை நிர்வாகத்திற்கு அறிவிக்கிறோம். 

போராட்டம்  நடத்துவது  நமக்கு  விருப்பமும் அல்ல . பொழுது போக்குமல்ல. அப்பாவி  ஊழியர்களின்  வாழ்வாதாரமே  பாதிக்கப்பட்டால்,  வேடிக்கை பார்ப்பதும் தொழிற்சங்கமாக இருக்க முடியாது என்பதை நிர்வாகத்தில் உள்ளவர்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். நம் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். நிர்வாகம் பிரச்சினையை தீர்த்திட முயலவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிகழ்வில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களை கீழே பார்க்கலாம்.








Tuesday, January 26, 2016

WE ARE VERY MUCH PROUD TO ANNOUNCE THAT WE GOT THE ORDERS FROM THE DEPARTMENT TO END THE SUFFERINGS OF THE LAKHS OF CLERICAL EMPLOYEES !

சும்மா  வராது  சுதந்திரம் ! நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் இடை விடாத முயற்சிக்கு கிடைத்த  வெற்றியே  இது ! 

"இனி  மாநிலச் சங்கம் முயற்சி எடுக்க வேண்டும்" என்று  "ஞாபக மறதியாக (?)" கூட சில  கோட்டச் சங்க வலைத்தளங்களில் எழுத வேண்டாம் என்று  மாநிலச் சங்கம் அன்போடு கேட்டுக் கொள்கிறது ! 

அதை  வேறு சில கோட்ட சங்கங்கள்  மறுபதிப்பு செய்திட வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறது.

எவராலோ  கிடைத்த உத்திரவு இது என்று WHATSAPP  , FACEBOOK இல் ஞாபக மறதியாக கூட  நீங்கள்  போட வேண்டாம். 

“நம் சங்கத்தின்”  வெற்றி இது என்று சொல்லிக்கொள்ள  நம் சங்கத் தோழர்களுக்கே”  ஏனோ  கூச்சம் அவர்கள் வேறு சங்கம் அல்லவே ?

மாநிலச்  சங்கத்தின் முயற்சியாலேயே கிடைத்தது  இந்த உத்திரவு என்பது  மறக்கலாகாது ! உங்கள் மாநிலச்  செயலர்  உங்கள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவரும் கூட  என்பதை  நினைவில் கொள்க !

அகில இந்திய பொதுச் செயலர் தோழர். பராசருக்கு கூட   நன்றி தெரிவிக்காமல் இருப்பது சரிதானா  என்பதை  யோசிக்கவும்.


கடந்த 2015,  நவம்பர் 2 ந் தேதி நம் தமிழக அஞ்சல் மூன்று வலைத் தளத்தில்  நாம் பிரசுரித்த செய்தி மற்றும் அகில இந்திய  சங்கத்தின் கடித நகலை  மீண்டும்  கீழே  தருகிறோம். பார்க்க ! மீண்டும் ஞாபகம்  கொள்க !

================================================================================

MONDAY, NOVEMBER 2, 2015


CHQ LETTER TO SECRETARY POSTS ON IRREGULAR FIXING OF BUSINESS HOURS BEYOND THE PRESCRIBED NORMS

தமிழகத்தின்   பல  பகுதிகளில் இருந்து, அலுவலகங்களின்  BUSINESS  HOURS என்பது ஒட்டுமொத்தமாக , சனிக்கிழமை  உட்பட 7 மணி நேரமாக மாற்றப் பட்டு வருவதாக புகார்  வந்தது. மேலும்  பல  மாநிலங்களிலும் இந்த நிலை தொடர்வதாக  நமக்கு  தெரிவிக்கப்பட்டது. 

எனவே நம்முடைய  மாநிலச் சங்கம் கடந்த 16.10.2015 அன்று  நம்முடைய அகில சங்கத்தின் கவனத்திற்கு ஈமெயில் மூலம் இந்த  பிரச்சினையை கொண்டு சென்றது.   நமது அகில இந்திய  சங்கமும்  தற்போது  இந்த பிரச்சினை  இலாக்கா  முதல்வரின்  கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கீழே பார்க்க  கடித  நகலை . மேலும்  இந்தப் பிரச்சினையை  JCM DEPTL COUNCIL MEETINGலும் எடுத்திட நம் மாநிலச்சங்கம், அகில இந்திய சங்கத்தைவேண்டியுள்ளது.

கடித  நகல்   கீழே  பார்க்க :-

பெற்ற  உத்திரவும்  கீழே  பார்க்க :-